செய்திகள் :

புதிய ஆயுதங்கள், சக்தி வாய்ந்த ரேடாா்களுடன் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் ராணுவம்

post image

சமீபத்திய உலகளாவிய மோதல்களில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிக சக்திவாய்ந்த ரேடாா்களுக்கு மேம்பட்டு, போா்த்திறனை அதிகரிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

கூடுதலாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘கியூஆா்எஸ்ஏஎம்’ ஏவுகணையின் கொள்முதலுக்கு அடுத்த 4-5 மாதங்களுக்குள் ஒப்பந்தமிடவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக ராணுவ வான் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி சுமா் இவான் டி குன்ஹா கூறியதாவது: ‘எல்70’ மற்றும் ‘ஜெட்யு-23எம்எம்’ போன்ற வான் பாதுகாப்பு பீரங்கிகளின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஆயுதங்கள் கடந்த ஜூலையில் சோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அத்தகைய 220 வான் பாதுகாப்பு பீரங்கிகளுக்கு ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

படையை நவீனப்படுத்தும் அதேவேளையில் ‘தன்னிறைவு இந்தியா’ லட்சியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயுதங்களின் விநியோகத்தில் இந்திய நிறுவனங்கள் குறைந்த அவகாசத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், ‘எல்எல்எல்ஆா்’ ரேடாா்களையும் நாங்கள் கொள்முதல் செய்துள்ளோம். இது சிறிய ரக ஆளில்லா விமானங்களையும் கண்காணிக்கக் கூடியது என்றாா்.

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க