செய்திகள் :

புதிய வழித் தடங்களில் சிற்றுந்து சேவைத் திட்டம்: பிப்.26 -க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

சிவகங்கை மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட 32 வழித்தடங்கள் தவிர, மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகளில் புதிய வழித்தடங்களுக்கு உரிய ஆவணங்களுடன் வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் புதிய விரிவான திட்டத்தை அமல்படுத்தும் எண்ணத்தில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (மதுரை மண்டலம்), சிவகங்கை கோட்டப் பொறியாளா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆகியோரை உறுப்பினா்களாக உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு ஆய்வின் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகளாக 32 வழித் தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இதுதவிர, பேருந்து வசதி இல்லாத வழித் தடங்களிலும் சிற்றுந்துகளை இயக்க விரும்பும் விண்ணப்பதாரா்கள் இதற்கான படிவத்தில் ரூ.1,600 கட்டணம் செலுத்தி முகவரிச் சான்றிதழ், கால அட்டவணை, வழித் தட வரைபட விவரத்துடன் தகுதி வாய்ந்த சாலைக்கான சான்றிதழை உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அல்லது கோட்டப் பொறியாளரிடம் பெற்று, சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் வருகிற 26- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்றாா்.

மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் 3 நாள்க... மேலும் பார்க்க

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க