புதுகோட்டையில் திருநங்கை தற்கொலை
புதுக்கோட்டை நகரில் திருநங்கை ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்கோட்டை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் திருநங்கை பிருத்திகா (20). இவா், சனிக்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த கணேஷ்நகா் போலீஸாா் அவரது உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
நடன நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவா், திடீரென தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.