செய்திகள் :

புதுக்கோட்டை: உயிரோடு குழந்தையைப் புதைக்க முயன்ற குடும்பம்; கடைசி நிமிடத்தில் மீட்ட போலீஸ்

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி உதயசூரியபுரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா (வயது: 21).

இவர், இலுப்பூர் மதர்தெரசா நர்சிங கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வினோதாவிற்குப் பெண் குழந்தை பிறந்தது.

அதனை அறிந்த வினோதாவின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் மயானத்தில் புதைக்க அக்குழந்தையை எடுத்துச் சென்றனர்.

அதனைப் பக்கத்து வீட்டில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் பார்த்து அருகிலுள்ள போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதனால், இன்ஸ்பெக்டர் கௌரி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

அங்கிருந்த மருத்துவர் நிர்மலாவதனம், குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து குழந்தையையும், தாய் வினோதாவையும் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

pudukkottai
pudukkottai

அவர்களின் முதற்கட்ட விசாரணையில் வினோதா கல்லூரி மாணவர் ஒருவருடன் நட்பாக இருந்ததால், கருவுற்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்தக் கல்லூரி மாணவரைக் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.

இது தொடர்பாகக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் தொட்டில் குழந்தைகள் திட்டம் செயல்படுகிறது.

குழந்தையை வளர்க்க இயலாதவர்கள் அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்களில் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு அரசு எல்லா உதவிகளும் செய்யும்" என்றார்.

மாணவரோடு ஏற்பட்ட பழக்கத்தில் பிறந்த குழந்தையை மாணவி ஒருவர் உயிரோடு புதைக்க முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Scam Alert: ஆன்லைன் ஆர்டர் டெலிவரி அட்டைப்பெட்டியை வைத்து பணமோசடி; பகீர் பின்னணியும் தற்காப்பும்

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த மோசடி இப்போது பரவலாகிவிட்டது.`கார்டு மேலே இருக்கும் 16 நம்பர் சொல்லு...' `உன் பேங்க் அக்கவுண்ட் லாக் ஆயிடுச்சி' என அறைகுறை தமிழில் பேசியவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்... மேலும் பார்க்க

பெரம்பலூர்: வீட்டு ரசீது வழங்க ரூ.25,000 லஞ்சம்; நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிக்கிய எப்படி?

பெரம்பலூர், ஆலம்பாடி ரோடு அன்பு நகரைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி மகேஸ்வரி. இவர், தற்போது பெரம்பலூர் நகர்ப்பகுதியில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார்.அந்த வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்கா... மேலும் பார்க்க

கரூர்: சுற்றுலா வாகனம் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து; 5 பேர் பலி; நிவாரணம் அறிவித்த முதல்வர்

கரூர், செம்மடை அருகே கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியது. இதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (... மேலும் பார்க்க

கரூர்: கம்பி வேலியைத் தொட்ட ஆசிரியை மின்சாரம் தாக்கி பலி; உறவினர்கள் போராட்டம்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மகாதானபுரம் தீர்த்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி மனைவி சரஸ்வதி (வயது: 55).இவர், மாயனூரில் உள்ள டான்செம் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், தனத... மேலும் பார்க்க

கும்பகோணம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான 4 பேரின் விவரங்களை மறைக்கிறதா போலீஸ்?

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.அதே கடையில் குடவாசல் மேட்டு தெருவைச் சேர்ந்த சண்முக பிரபு (2... மேலும் பார்க்க

``மீட்டு தந்தது போலி..'' - ரூ.23 கோடி மதிப்புள்ள வைரக்கல் வழக்கில் வியாபாரி புகார்; திடீர் திருப்பம்

சென்னை அண்ணாநகர், பி பிளாக், 17-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (69). இவர், வைர கல், நகைகளை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகரின் நண்பர் சுப்பிரமண... மேலும் பார்க்க