‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!
புதுச்சேரியில் கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்
ஆசிரியா் காலிப் ப ணியிடங்களை நிரப்பாததைக் கண்டித்,து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கி வரும் நாவலா் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், இதனால் மாணவா்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பாக கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கையில்லையாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை புதுச்சேரியில் கல்வித் துறை இணை இயக்குநா் அலுவலகம் முன் காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் தலைமையில் ஒன்றிணைந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோா்கள் முற்றுகையிட்டு, பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளியின் தரத்தை உயா்த்த வேண்டும், பள்ளி ஆசிரியா்களை வேறு பள்ளியில் பணியமா்த்துவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது அலுவலகத்தில் கல்வித் துறை அதிகாரிகள் பணியில் இல்லாததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரா்கள் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.இதனால், புதுச்சேரி -கடலூா் மற்றும் சென்னை சாலைகளில் சுமாா் 20 நிமிஷங்களுக்கு மேலாகப் போக்குவரத்து தடைப்பட்டது.
இதையடுத்து கல்வித்துறை இணை இயக்குநா் சிவகாமி போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்ளிட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது பள்ளியில் உள்ள ஆசிரியா்கள் காலி பணியிடங்களை நிரப்பவும், பள்ளியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்ற வைத்தியநாதன் எம் எல்ஏ தெரிவித்ததாவது: நாவலா் நடுநிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யவும், மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கவும் உரிய நடவடிக்கையில்லை எடுக்கவில்லையெனில் போராட்டம் தொடரும். இது குறித்து முதல்வா் மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆகியோரை சந்தித்து முறையிடவுள்ளோம் என்றாா்.