செய்திகள் :

புதுச்சேரியில் மதுக் கடைகளுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்வு!

post image

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைஉரிமத்திற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு கடந்த மே 28 ஆம் தேதி அமலுக்கு வந்தது. பீருக்கு ரூ.10 வரையிலும், குவார்ட்டர் மது பாட்டில் ரூ.6 முதல் ரூ.30 வரையும் விலை உயர்ந்துள்ளது.

அரசுக்கு நிதி வருவாய் குறைவாக இருப்பதால் அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மதுக்கடை உரிமத்திற்கான ஆண்டுக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்த கொள்முதல் கடைகளுக்கான உரிமத்திற்கு ஆண்டு கட்டணம் ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாகவும் சில்லறைக் கடைகளுக்கான ஆண்டு கட்டணம் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பிரிவின் கீழ் உணவகங்களில் செயல்படும் மதுக்கூடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுபானங்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கான கலால் வரியையும் அரசு உயர்த்தியுள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் இந்த உரிமத் தொகையை 10 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அரசு இப்போது உயர்த்தியுள்ளது.

இதையும் படிக்க | நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

தங்கம் விலை இன்று உயர்ந்தது! எவ்வளவு?

தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 120 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் விநாயகர் சிலை உடைப்பு: நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டூழியம்!

ஆலங்குளத்தில் நள்ளிரவில் மர்ம நபர்களால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன் கோட்டையில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் ... மேலும் பார்க்க

‘யாா் அந்த சாா்’ கேள்வி எழுப்பினால் இனி நீதிமன்ற அவமதிப்பு!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனைத் தவிா்த்து வேறு எவருக்கும் தொடா்பு இல்லை என்றும், ‘யாா் அந்த சாா்’ எனகேள்வி எழுப்பினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும்... மேலும் பார்க்க

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை!

குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு பெண்கள்... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை: செய்திகள் நேரலை

எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?அண்ணா பல்கலை மாணவியை கடுமையாக தாக்கியதற்காக 7 ஆண்டுகள், ஆதாரங்களை அழித்தற்கு 3 ஆண்டுகள், தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை ... மேலும் பார்க்க