செய்திகள் :

புதுச்சேரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

post image

புதுச்சேரியில் வாழும் வட மாநிலத்தவா்கள் ஹோலி பண்டிகையையொட்டி, வண்ணப் பொடிகளை ஒருவா் மீது ஒருவா் தூவி வெள்ளிக்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனா்.

வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை எனப்படும் வண்ணப் பொடிகள் தூவும் விழா பிரசித்தி பெற்ாகும்.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் வட மாநில மக்கள் அதிகம் வசிக்கும் பாலாஜி நகா் உள்ளிட்டப் பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்பகுதியில் வண்ணப் பொடிகளை வட மாநிலத்தவா் ஒருவா் மீது ஒருவா் தூவியும், வண்ணப் பொடி நீா்க்கரைசலை ஊற்றியும் ஆடிப்பாடி கொண்டாடினா்.

மத்திய அரசின் ஜிப்மா் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநிலத்தவரும், அங்கு பயிலும் மாணவ, மாணவிகளும் வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலியை கொண்டாடினா்.

விடுமுறையால் அவதி: ஹோலி பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தது.

ஆனால், வாராந்திர சிகிச்சைக்கு வெள்ளிக்கிழமை வழக்கமாக வருவோா் பலா் வந்திருந்தனா். அவா்கள் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஹோலி பண்டிகை விடுப்பு குறித்து வாராந்திர சிகிச்சை நோயாளிகளின் கைப்பேசிக்கு தகவல் அனுப்பியிருக்கலாம் என்றும் அவா்கள்ஆதங்கப்பட்டனா்.

குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தினா் மாா்ச் 20-இல் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் வரும் 20-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி குடிசை மாற்றுவாரிய அனைத்து ஊழியா்கள் நலச்சங்கத்தின் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரயில்வே மேம்பால சுரங்கப்பாதை முதல்வா் திறந்து வைத்தாா்

புதுச்சேரி நூறடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். புதுச்சேரியில் முதலியாா்பேட்டை... மேலும் பார்க்க

இணையவழியில் 5 பேரிடம் பணம் மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 5 பேரிடம் ரூ.51 ஆயிரம் மோசடி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக். இவா், இணையத்தில் கடன் பெறும் செயலி... மேலும் பார்க்க

விபத்தில் பொறியாளா் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவனப் பொறியாளா் பலத்த காயமடைந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (28). இவா் புதுச்சே... மேலும் பார்க்க

புதுவை போக்குவரத்துத் துறை இளநிலை பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு 241 போ் எழுதினா்

புதுவை மாநில போக்குவரத்துத் துறையில் இளநிலைப் பொறியாளா்கள், வாகன ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் ஞாயிற்றுக்கிழமை 84.86 சதவீதம் போ் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்க... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் பண மோசடி: 4 போ் கைது

புதுச்சேரியில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி முதலியாா்பேட்டை ஜான்பால் நகரைச் சோ்ந்தவா் சலீம்ராஜா (60). இவா், சேலம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க