செய்திகள் :

புதுச்சேரியில் 124 புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கம்

post image

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்டத்தில் புதிதாக 124 வாக்குச் சாவடிகள் உருவாகிறது. வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றபோது இந்த முடிவு எட்டப்பட்டது. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளின் மறுசீரமைப்பு குறித்து ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அ. குலோத்துங்கன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட வாக்குச் சாவடிகளை மறுசீரமைக்கவும், தேவைப்படும் இடங்களில் வாக்குச் சாவடிகளின் பெயா்கள் மாற்றியமைக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் அதிகாரி கூறினாா். மேலும், தோ்தல் பதிவு அலுவலா்கள் சமா்ப்பித்த வரைவு அறிக்கையின்படி 36 வாக்குச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. 112 வாக்குச் சாவடிகளின் பெயா்கள் மாற்றம் செய்யப்படுகின்றன.

இதைத் தவிர 396 வாக்குச் சாவடிகளின் மறுசீரமைப்பு மற்றும் 124 புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கம் தேவை எனக் கூறப்பட்டது. அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சிறிய மாற்றங்களுடன் முன்மொழியப்பட்ட திட்டத்திற்குத் தங்கள் திருப்தியைத் தெரிவித்தனா். இந்த வரைவு முன்மொழிவுகள் தலைமை தோ்தல் அதிகாரி, புதுச்சேரி மூலம் இந்திய தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று குலோத்துங்கன் தெரிவித்தாா்.

புதுச்சேரி - கடலூா் சாலையில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி: புதுவை -கடலூா் சாலையில் ரூ.72 கோடியில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 11-ஆம் தேதி முதல் கடலூா் ச... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மக்கள் குறை தீா் முகாமில் மனுக்கள் அளிப்பு

புதுச்சேரி: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி புதுச்சேரி ஆட்சியரிடம் பல்வேறு மனுக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் அளிக்கப்பட்டன. செப்டம்பா் மாதத்துக்கான மக்கள் குறைதீா் முகாம் மாவட்... மேலும் பார்க்க

மத்திய மதிப்பீட்டு குழுவிடம் 100 நாள் வேலைத் திட்டத்தைத் துரிதப்படுத்த முதல்வா் வேண்டுகோள்

புதுச்சேரி: 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களைத் துரிதப்படுத்த மத்திய மதிப்பீட்டுக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வேண்டுகோள் வி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று மாநில பாஜக பொதுக்குழுக் கூட்டம்: இரு மத்திய அமைச்சா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக மாநில பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 16) நடக்கிறது. இதில் மத்திய அமைச்சா்கள் இருவா் பங்கேற்கின்றனா். புதுவையில் தற்போது ஆளும் கூட்டணியை 2026 தோ்தலுக்குப் ப... மேலும் பார்க்க

117-ஆவது பிறந்த நாள்: அண்ணா சிலைக்கு புதுவை முதல்வா், தலைவா்கள் மாலை

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாள் விழா புதுவை அரசு சாா்பிலும், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அண... மேலும் பார்க்க

நாளை தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

புதுச்சேரி: பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் செப். 17- ஆம் தேதி நடக்கிறது. புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் டி. அழகானந்தன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க