செய்திகள் :

புதுச்சேரி: `அரைகுறை ஆடைகளுடன் வரும் பெண்களுக்கு ரெஸ்டோ பாரில் அனுமதி இலவசம்’ - அரசை சாடும் அதிமுக

post image

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், ``புதுச்சேரியில் புற்றீசல் போல ரெஸ்டோ பார்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு ரெஸ்டோ பாரில் நடைபெற்ற கொலை தொடர்பாக காவல் துறை மற்றும் கலால் துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகள விதித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

புதுச்சேரியில் ரெஸ்டோ பார்கள் நடத்துவதற்கு போலீஸார் எந்தவித அனுமதியும் வழங்குவதில்லை. மாறாக ரெஸ்டாரன்ட்களில் உணவு சாப்பிட வருபவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு மட்டும் இரவு 12 மணி சுற்றுலா எஃப்.எல் 2 லைசென்ஸ் வழங்கப்படுகின்றன.

அதைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியாளர்களுக்குக் வேண்டப்பட்ட ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள், பெண்களின் அரைகுறை நடனம், ஆண், பெண் இருவரும் சேர்ந்து ஆடும் நடனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன்

இதற்கு கட்டணமாக ஆண், பெண் ஜோடியாக வந்தால் ரூ.3,000, ஆண் மட்டும் தனியாக வந்தால் ரூ.2,000, அரைகுறை ஆடையுடன் வரும் பெண்ணுக்கு கட்டணம் இலவசம் என்றும் அறிவித்து நடத்தப்படுகிறது.

இப்படி நடக்கும் ரெஸ்டோ பார்களில் உள்ளாட்சி நிர்வாகம் முறையாக கேளிக்கை வரிகள் விதித்து வசூல் செய்தாலே, ரெஸ்டோ பார்களில் இருந்து நகராட்சிகளுக்கு ஆண்டுக்கு ரூ.70 கோடி வருவாய் கிடைத்திருக்கும். ஆனால் இரண்டு நகராட்சிகளும் ரெஸ்டோ பார்களில் இருந்து ஒரு பைசா கூட வரியாக வசூல் செய்யாமல் இருப்பது திட்டமிட்ட மிகப்பெரிய ஊழல்.

புதுச்சேரி அரசு இந்த ரெஸ்டோ பார் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தால், எந்தவித அனுமதியும் இன்றி நடத்தப்படும் அரை குறை ஆடை நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும். அத்துடன் அவற்றை நடத்துபவர்கள் மீது வழக்கும் பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

தூய்மைப் பணியாளர்கள்: "திருமாவளவன் கூறுவது சரியல்ல" - பணி நிரந்தரத்தை விவரிக்கும் CPM பெ.சண்முகம்

சென்னையில் தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாகப் போராடிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு நீதிமன்ற உத்தரவு பெயரில் வலு... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழுவில் எழுந்த அதிமுக ஆதரவுக் குரல்கள்; உணர்ச்சிவசப்பட்ட ராமதாஸ் - என்ன நடந்தது?

`அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படலாம்...’பாட்டாளி மக்கள் கட்சியில், மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், ஒன்பது மாதங்களைக் கடந்து உச்சம் தொட்டுள்ள நிலையில், ராம... மேலும் பார்க்க

'நாடகம் நடத்தாதீர்கள்; தமிழகம் முழுக்க தூய்மைப் பணியாளர் போராட்டம் வெடிக்கும்!' - போராட்டக்குழு

'போராட்டக்குழு பத்திரிகையாளர் சந்திப்பு!'சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டி போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு மறுநாள் விடுவிக்... மேலும் பார்க்க

``தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம்; திமுக ஆதரிக்க வேண்டும்"- நயினார் நாகேந்திரன் கோரிக்கை

துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று கூடிய பா.ஜ.க தலைமை கூட்டத்தில், துணை ஜனாதிபதி பதவி வேட்பாளராக மகார... மேலும் பார்க்க

TVK: கிடா விருந்து; 1.50 லட்சம் நாற்காலிகள்; விஜய்யின் ஸ்பெஷல் உரை - மதுரை மாநாடு லேட்டஸ்ட் அப்டேட்

கிடா விருந்து, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை, ஊரெங்கும் விளம்பரங்கள், வீடு வீடாக அழைப்பு என்று களைகட்டி வருகிறது மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு.புஸ்ஸி ஆனந்த்முதல் ம... மேலும் பார்க்க

ADMK: `அதிமுக பலவீனமா இருக்கு, அதை சரிசெய்யத்தான் நான் இருக்கேன்' - சசிகலா பேசியது என்ன ?

சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை), சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்ச... மேலும் பார்க்க