செய்திகள் :

புதுச்சேரி: `சிபிஎஸ்இ தேர்வில் மாணவர்களின் தோல்விக்கு மாநில அரசே காரணம்!’ - திமுக குற்றச்சாட்டு

post image

புதுச்சேரியில் நடைபெற்ற சிபிஎஸ்இ தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்ததற்கு, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசுதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சுமத்தியிருக்கிறார்.

`விடைத்தாள்களின் நகலுக்கு ரூ.500 வாங்கும் அரசு’

இது குறித்துப் பேசிய அவர், ``புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தியதன் விளைவாக, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தோல்வியடைந்துள்ளனர். இந்த தோல்வி புதுச்சேரி அரசின் கல்விக் கொள்கையின் தோல்வியை தெளிவாக உணர்த்துகிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த முடிவு, அரசின் திட்டமிடப்படாத அணுகுமுறையையும் காட்டுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சியோ, மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலோ வழங்கப்படவில்லை.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

அதன் விளைவாக, மாணவர்கள் கடுமையான உளவியல் மற்றும் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த அவலநிலைக்கு புதுச்சேரி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என வன்மையாக கண்டிக்கிறேன். புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், தங்கள் விடைத்தாள்களின் நகல்களைப் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கு ரூ.500/- செலுத்த வேண்டியிருக்கிறது. அதேபோல ஒரு கேள்விக்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.100/- செலவாகிறது. அதேசமயம், தமிழ்நாடு மாநில சமச்சீர் பாடத்திட்டத்தில் விடைத்தாள் நகலை பெறுவதற்கு செலவாகும் தொகை வெறும் ரூ.275/- மட்டும்தான்.

`புதுச்சேரி அரசின் செயல் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும்...’

அத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நகல்களைப் பெறுவதற்கு இரு மடங்கு செலவாகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கட்டணங்கள், மாத கடுமையான நிதிச்சுமையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. தங்களின் விடைத்தாள்கள் முறையாக திருத்தப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள நினைக்கும் மாணவர்களின் தலையில், இப்படியான செலவுகளை ஏற்றுவது அநீதியான ஒன்று. இப்படியான பொருளாதார பாதிப்புகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக அமைவதுடன், உளவியலாகவும் அவர்களை பாதிக்கிறது.

தேர்வு முடிகள் | கோப்புப் படம்

அதேபோல சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்ட தோல்விகள், மாணவர்களின் கல்வி இடைநிற்றலை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், தோல்வியின் உளவியல் தாக்கத்தையும், மறுதேர்வு மற்றும் மறுமதிப்பீட்டிற்கான செலவுகளையும் தாங்க முடியாமல் கல்வியை கைவிடும் நிலைக்த் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் இத்தகைய குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டும் பயிற்சிகளோ, மறுதேர்விற்கு உரிய வழிகாட்டுதலோ முறையாக வழங்கப்படவில்லை. புதுச்சேரி அரசு இதில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது” என்றார்.

'70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குவது தான் 'ஆயுஷ்மான் வயோ வந்தனா' திட்டம்.இதில் ஒரு கு... மேலும் பார்க்க

PMK: "எவ்வளவோ அபாண்டமான பழிகளைச் சுமந்திருக்கிறேன்" - நிர்வாகிகள் மத்தியின் அன்புமணி உருக்கம்

'அன்புமணி ஆலோசனை...'பனையூரில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி முடித்திருக்கிறார்.ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

DOGE-ல் இருந்து விலகிய மஸ்க்... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பில் விரிசலா; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

'அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே மனக்கசப்போ?' என்கிற கேள்வி நேற்று முன்தினத்தில் இருந்து உலகில் வட்டமடித்து வருகிறது.'ஒரு ஸ்ட்ரைட் ஆண் மற்றொரு ஆணை எவ்வளவு காதலிக்க முடியுமோ, அ... மேலும் பார்க்க

MDMK: "மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தம்தான்; ஆனால்..." - துரை வைகோ சொல்வது என்ன?

மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தமாகத்தான் இருக்கிறது என்று ம.தி.மு.க முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ பேசியிருக்கிறார்.திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரசு ஊழியர் கைது... காங்கிரஸைச் சாடும் பாஜக! - என்ன நடந்தது?

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்புக்காக உளவு பார்த்ததாகக் கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளரும் தற்போதைய அரசு ஊழியருமான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க