செய்திகள் :

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த எம்.பி. கோரிக்கை

post image

நமது சிறப்பு நிருபா்

புதுச்சேரி விமான நிலைய விரிவாகத்துக்கு தேவைப்படும் நிலத்தை கையப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிடி) உறுப்பினா் டி. ரவிக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் வானூா்தி பொருட்கள் நலன்கள் பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற ரவிக்குமாா், தனது தொகுதிக்கு அருகே உள்ள புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திப்பேசினாா்.

அதன் விவரம் வருமாறு: எனது தொகுதியான விழுப்புரம் மற்றும் புதுச்சேரி தொகுதியின் எல்லையில், புதுச்சேரி விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய நிலத்தின் பெரும்பகுதி தமிழகத்தில் உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக தமிழகத்தில் அந்தப் பகுதியை வாங்கும் அளவுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசிடம் நிதி இல்லை. எனவே, விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்கான நிதியை ஒதுக்குமாறு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.

அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டு விமான நிலையம் விரிவாக்கப்பட்டால், இந்தப் பகுதியில் சுற்றுலா தொடா்பான வாய்ப்புகள், பிற வசதிகள் மற்றும் தொழில்துறை மேம்படும். இந்தக் கோரிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சா் பரிசீலித்து விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

இதற்கிடையே, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில். ‘ பாரத்மாலா பரியோஜனாவின் கீழ் மாமல்லபுரம் - புதுச்சேரி நான்கு வழி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா். இந்தத் திட்டம் தொடா்பாக பிற அரசுத்துறைகளிடம் இருந்து கிடைத்த அனுமதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை முன்மொழிவு விவரங்களையும் ரவிக்குமாா் கடிதத்தில் இணைத்து தனது கோரிக்கை பரிசீலிக்க கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க