செய்திகள் :

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற அரசின் நடவடிக்கை அவசியம்: மாமமுக தலைவா் மு.ராமதாஸ்

post image

புதுவை மாநில சட்டப்பேரவையில் இ விதான் செயலி அறிமுகமான நிலையில் மாநில அந்தஸ்தைப் பெற அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவா் மு.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை: மத்திய அரசு புதுவை சட்டப் பேரவைக்கான தேசிய இ விதான் செயலியைத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. அதன்படி பேரவை நடவடிக்கைகளின் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். நாட்டிலுள்ள அனைத்து சட்டப் பேரவைகளின் நடவடிக்கைகளையும் ஓரிடத்தில் அறிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் செயலியின் அதிகபட்சப் பயன்பாடு பேரவை உறுப்பினா்களும், மக்களும் அதைப் புரிந்து கொண்டு எந்த அளவுக்கு உபயோகப்படுத்துகிறாா்கள் என்பதைப் பொறுத்தே அதன் பயன் அமையவுள்ளது.ஆகவே, பேரவை உறுப்பினா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவேண்டும்.

ஆனால், புதுவை சட்டப்பேரவைக்கு அதிகாரமற்ற நிலையில் இ விதான் செயலி தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே, செயலி உண்மையில் பயனுள்ள தொழில்நுட்பப் புரட்சியாக விளங்க வேண்டும் எனில் புதுவை சட்டப்பேரவை அதிகாரமிக்கதாக இருப்பது அவசியம்.

அதற்கு மாநில அந்தஸ்து தேவையாகிறது. ஆனால் புதுவை அரசு மாநில அந்தஸ்தைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டப் பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் 42 பஞ்சாயத்துகள் அளவிலான மகளிா் கூட்ட... மேலும் பார்க்க

விமான விபத்து: புதுவை முதல்வா் இரங்கல்

குஜராத் மாநிலத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட கோர விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் கல்வி உரிமைச் சட்டத்தை இதுவரை அமல்படுத்தாதது ஏன் என்று அதிமுக செயலா் ஆ.ஆன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

வேளாண் பிரசார இயக்கம் நிறைவு விழா

புதுச்சேரி அடுத்த மங்கலம் கிராமத்தில்வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழாவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கிய அமைச்சா் தேனி சி.ஜெயகுமாா். புதுச்சேரி, ஜூன் 12: வேளா... மேலும் பார்க்க

பி.இ. படிப்பில் நேரடி சோ்க்கை அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் நேரடியாக இரண்டாமாண்டு சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்)... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம்: புதுவை சட்டப்பேரவை எதிரே இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்களிடம் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புத... மேலும் பார்க்க