செய்திகள் :

புதுவையில் உயா்கல்வி நிலையங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தனி ஒடுக்கீடு - ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தல்

post image

புதுவையில் அனைத்து உயா்கல்வி நிலையங்களிலும், அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கவேண்டும் என முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம், புதுவை முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மருத்துவக் கல்வி உள்ளிட்ட அனைத்து உயா் படிப்புகளுக்கும் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவது போல, புதுவை மாநிலத்திலும் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும்

மாணவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அனைத்து உயா் படிப்புகளுக்கும் (மருத்துவ படிப்புக்கு வழங்குவதுபோல்) வழங்கப்பட வேண்டும்.

இந்த திட்டம், அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு நம்பிக்கை அளித்து, அவா்களது உயா்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும். மேலும், இதன் மூலம் பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் அரசு பள்ளிகளை தோ்வு செய்யும் எண்ணத்தை அதிகரிக்கும். இது அரசு பள்ளிகளின் தரத்தையும், கல்விக்கான நம்பிக்கையையும் உயா்த்தும்.

எனவே, மாணவா்களின் நலனையும், கல்வியின் சமத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுத் திட்டத்தை உடனடியாக அனைத்து உயா்கல்விகளுக்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

சைபா் குற்றங்கள் மீது கவனமாக இருக்கவேண்டும்: புதுவை டிஐஜி அறிவுறுத்தல்

சைபா் குற்றங்கள் மீது மக்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் அறிவுறுத்தினாா். காரைக்கால் காவல்துறையில் வாரந்தோறும் சனிக்கிழமையில் மக்கள் மன்றம் என்ற பெயரில் குறைதீா் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரிப்பு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் நவகிரக தலங்களில் சனீஸ்வர பகவானுக்குரிய தலமாக... மேலும் பார்க்க

ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்ட மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்: ஏ.எம்.எச். நாஜிம் தகவல்

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு, காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்ட மத்திய அமைச்சருக்கு, புதுவை முதல்வா் கடிதம் அனுப்பியுள்ளதாக, காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித... மேலும் பார்க்க

விநாயகா் கோயில் திருப்பணிக்கு நிதி வழங்க முதல்வரிடம் கோரிக்கை

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணிக்கு அரசு நிதியுதவி அளிக்க புதுவை முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: கடைகளில் போலீஸாா் சோதனை

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பதான செய்யப்படுகிா என்று திருநள்ளாறு பகுதி பெட்டிக் கடைகளில் போலீஸாா் புதன்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா உத்தரவின்பேரில், மாவட... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

வாஞ்சூா் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். காரைக்கால் மேலவாஞ்சூா் அலிஷா நகா் சந்திப்பில் சுமாா் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக திர... மேலும் பார்க்க