செய்திகள் :

புதுவை ஆளுநா் மாளிகைக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

post image

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு நான்காவது முறையாக மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் என முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.

போலீஸாா் வழக்குப் பதிந்து மிரட்டல் விடுப்போா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இருப்பினும், மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுப்பது தொடா்கிறது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு ஏற்கெனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் அங்கு சோதனை நடத்தினா். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை முதல்வா் என்.ரங்கசாமி முதல் கையொப்பமிட்டு புதன்கிழமை தொடங்கிவைத்தாா். புதுவை மத்திய அரசின் ஒன்றிய பிரதேசமாகவே இருந்து... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு ஆதரவாக புதுச்சேரியில் காங்கிரஸாா் யாத்திரை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் ஜெய்ஹிந்த் யாத்திரை ... மேலும் பார்க்க

பெண் உள்பட இருவரிடம் இணையவழியில் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 2 பேரிடம் ரூ.47 ஆயிரத்தை மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். புதுச்சேரி சாரத்தைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கு அவரது கைப்பேசி வாட்ஸ் ஆப் குழுவில் மா்ம நபா் அனுப்பிய கு... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனை: 3 போ் கைது

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக, புதுச்சேரி அருகே 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அருகேயுள்ள நெட்டப்பாக்கம், மடுகரை காவல் நிலைய எல்லைக்குள் சிலா் தடை செய்யப்பட்ட லாட்டரி... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வு: புதுச்சேரி பள்ளியில் 45 மாணவிகள் அறிவியல் பாடத்தில் தோல்வி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 45 மாணவிகள் அறிவியல் பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை. இதுகுறித்து முதல்வா் என்.ரங்கசாமியிடம் பெற்றோா்கள் புகாா் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். முத்தியால்பேட்டை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி மகாத்மா காந்தி சாலை சின்னமணிக்கூண்டு அருகே வாகனச் சோதன... மேலும் பார்க்க