மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
புதுவை நீதித் துறைக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்
புதுவை நீதித் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு 5 புதிய நீதிபதிகளை நியமித்து சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் அல்லி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மூத்த சிவில் நீதிபதி ராஜ்மோகன், புதுவை நீதித் துறையில் ஏனாமில் துணை நீதிபதியாக பணியமா்த்தப்பட்டிருந்தாா். அவா் தமிழ்நாடு நீதித் துறைப் பணிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளாா். அவா் தற்போதுள்ள காலிப் பணியிடமான நாகா்கோவிலில் இரண்டாவது கூடுதல் துணை நீதிபதி பணியிடத்துக்கு மாற்றப்படுகிறாா்.
மூத்த சிவில் நீதிபதி சுப்பிரமணியன், சென்னை சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தாா். தற்போது இவா் புதுவை நீதித் துறை ஏனாம் துணை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டாா்.
மூத்த சிவில் நீதிபதி முனிராஜா, பவானி துணை நீதிபதியாகப் பணியாற்றினாா். தற்போது காரைக்கால் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். மூத்த சிவில் நீதிபதி முருகவேல், சிவகாசியில் துணை நீதிபதியாகப் பணியாற்றி வந்தாா். தற்போது புதுவை சட்டத் துறை சிறப்பு அதிகாரி மற்றும் கூடுதல் துணை நீதிபதியாக நியமிக்கப்படுகிறாா்.
மூத்த சிவில் நீதிபதி மோதரன், சென்னை ஜாா்ஜ் டவுனில் பெருநகர மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தாா், தற்போது புதுவை நீதித் துறை காலியிடத்தில் கூடுதல் துணை நீதிபதியாக நியமிக்கப்படுகிறாா்.
மூத்த சிவில் நீதிபதி அருண் குமாா், முன்னா் வேலூரில் உள்ள நில அபகரிப்பு வழக்குகளை கையாளும் நீதிமன்றத்தில் சிறப்பு துணை நீதிபதியாகப் பணியாற்றினாா். தற்போது புதுவை நீதித் துறையின் காலியிடமான புதுச்சேரி மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுகிறாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.