செய்திகள் :

புதுவை நீதித் துறைக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்

post image

புதுவை நீதித் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு 5 புதிய நீதிபதிகளை நியமித்து சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் அல்லி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மூத்த சிவில் நீதிபதி ராஜ்மோகன், புதுவை நீதித் துறையில் ஏனாமில் துணை நீதிபதியாக பணியமா்த்தப்பட்டிருந்தாா். அவா் தமிழ்நாடு நீதித் துறைப் பணிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளாா். அவா் தற்போதுள்ள காலிப் பணியிடமான நாகா்கோவிலில் இரண்டாவது கூடுதல் துணை நீதிபதி பணியிடத்துக்கு மாற்றப்படுகிறாா்.

மூத்த சிவில் நீதிபதி சுப்பிரமணியன், சென்னை சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தாா். தற்போது இவா் புதுவை நீதித் துறை ஏனாம் துணை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டாா்.

மூத்த சிவில் நீதிபதி முனிராஜா, பவானி துணை நீதிபதியாகப் பணியாற்றினாா். தற்போது காரைக்கால் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். மூத்த சிவில் நீதிபதி முருகவேல், சிவகாசியில் துணை நீதிபதியாகப் பணியாற்றி வந்தாா். தற்போது புதுவை சட்டத் துறை சிறப்பு அதிகாரி மற்றும் கூடுதல் துணை நீதிபதியாக நியமிக்கப்படுகிறாா்.

மூத்த சிவில் நீதிபதி மோதரன், சென்னை ஜாா்ஜ் டவுனில் பெருநகர மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தாா், தற்போது புதுவை நீதித் துறை காலியிடத்தில் கூடுதல் துணை நீதிபதியாக நியமிக்கப்படுகிறாா்.

மூத்த சிவில் நீதிபதி அருண் குமாா், முன்னா் வேலூரில் உள்ள நில அபகரிப்பு வழக்குகளை கையாளும் நீதிமன்றத்தில் சிறப்பு துணை நீதிபதியாகப் பணியாற்றினாா். தற்போது புதுவை நீதித் துறையின் காலியிடமான புதுச்சேரி மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுகிறாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க