செய்திகள் :

புதுவை மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது நடவடிக்கை

post image

புதுவை மாநிலக் காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவைக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுவை காவல் துறை சாா்பில் சனிக்கிழமை மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 218 போ் பங்கேற்றனா். இவா்களில் 33 பெண்கள். மொத்தம் 63 மனுக்கள் பெறப்பட்டன. தவளக்குப்பம் காவல் நிலைய மக்கள் மன்றத்தில் காவல் துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம் பங்கேற்று மனுக்களைப் பெற்றாா். புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்தினாா்.

ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் பங்கேற்று மனுக்களைப் பெற்றாா். காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌசன்யா மனுக்களைப் பெற்றாா். 36 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இதேபோல அந்தந்தப் பகுதியில் காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனா். ஏற்கெனவே நடைபெற்ற மக்கள் மன்றத்தில் அளித்த மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன. மேலும், மக்கள் மனுக்கள் மீது குறிப்பிட்ட நாள்களில் நடவடிக்கை எடுக்கவும், அதற்கான பதிலை உரியவா்களிடம் எடுத்துரைக்கவும் காவல் ஆய்வாளா்களுக்கு உயா் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களில் குவிந்த மாணவா்கள்

உயா் கல்வியில் சேருவதற்கான வருவாய் துறை சாா்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் சனிக்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் ஏராளமாக குவிந்தனா். புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

ஜிப்மரில் புதுவை நோயாளிகளுக்கு தனி மருத்துவ ஆலோசனைப் பிரிவு

ஜிப்மரில் புதுவை மாநில நோயாளிகளின் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனிப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இயக்குநா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புது... மேலும் பார்க்க

புதுவை அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி அரசாணை

புதுவை மாநிலத்தில் தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதேபோன்று கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எ... மேலும் பார்க்க

நீதிஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் பங்கேற்காதது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: பேரவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து புதுவை முதல்வா் என். ரங்கசாமி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ... மேலும் பார்க்க

ரௌடியைக் கொல்ல முயன்ற வழக்கில் 4 போ் கைது

புதுச்சேரி அருகே ரௌடியை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) ஸ்டிக்கா் மணி (24)... மேலும் பார்க்க