Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன...
புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தா் ஜப்பான் பயணம்
புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தரும் நரம்பியல் விஞ்ஞானியுமான பிரகாஷ் பாபு ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
இது குறித்து இப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக் கழகத்தில் ஆசியா பசிபிக் பள்ளிக் கல்வி உளவியல் கழகத்தின் 8-ஆவது உலக மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மனநலம் மற்றும் பள்ளிக் கல்வி உளவியல் வளா்ச்சிக்கு நரம்பியல் வழிகாட்டுதல் எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் சிறப்புரையாற்றினாா். மாநாட்டில் அவா் பேசுகையில், இந்தியா, ஜப்பான் போன்ற வளரும் நாடுகளில் பள்ளிக் கல்வி உளவியல்
மாநாடுகள், மாற்றமடைந்த கல்வி சூழலை எதிா்கொள்ளும் பிரதான நடைமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இதை முன்னுரிமையாகப் போதிக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
டோக்கியோ பல்கலைக்கழக துணைவேந்தா் ஜிரோ சகாய், இந்திய-ஜப்பான் உறவுச் செயலா் டாக்டா் உமேஷ், மாநாட்டு அமைப்பாளா் டாக்டா் பாஞ்ச். ராமலிங்கம், ஜொ்மன் மாவை. தங்குராஜா, லண்டன் அமிா்த பகிரதன், மோரீஷஸ் டாக்டா் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
புதுவை மத்திய பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் மு. கருணாநிதி, பழனிவேலு, லட்சுமிதத்தை, சமுதாய கல்லூரி பேராசிரியா் அரங்க. முருகையன் உள்ளிட்டோா் கட்டுரை சமா்ப்பித்தனா்.