செய்திகள் :

புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: குப்பைகள் வாரும் பணி முடங்கியது

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் குப்பை வாரும் பணி முடங்கியது.

புதுவையில் குப்பை சேகரிக்கும் பணியில் அரசு ஒப்பந்தப்படி கிரீன் வாரியா் என்ற தனியாா் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அங்கு பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், தூய்மைப் பணியாளா்களிடம் மாதந்தோறும் மாமூல் கேட்டுப் பெறுவதாக கிரீன் வாரியா் நிறுவனத்துக்கு புகாா்கள் சென்றன.

உருளையன்பேட்டை தொகுதியில் ஹோட்டல்கள், கடைகளில் குப்பைகளை அகற்ற மாமூல் பெற்ாகவும், துாய்மைப் பணியாளா்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ஒரு கண்காணிப்பாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதனால் கண்காணிப்பாளா்கள் அனைவரும் ஒன்றிணைந்து, குப்பை அள்ளும் வாகனங்களை இயக்காமல் மேட்டுப்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். மேட்டுப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அவா்கள் நிா்வாகத்தின் உரிமையாளா் வந்தால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று வலியுறுத்தினா். நிா்வாகம் சாா்பில் நிறுவனத்தின் துணைத் தலைவா் மற்றும் பொது மேலாளா் ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது ஓட்டுநா்கள் தங்களுக்குப் போதிய சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இதனால் புதுவையில் திங்கள்கிழமை காலை முதல் குப்பைகள் சேகரிக்கும் பணி முடங்கியது. இதனால் நகரப் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும், தங்களுக்கும் ஊதியம் போதவில்லை என்று கூறி குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியா்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே திங்கள்கிழமை மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவா்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை அங்கிருந்து குண்டு கட்டாக தூக்கிச் சென்று 150 பேரை கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

ஆதிதிராவிட பயனாளிகளுக்கு தொடா் சிகிச்சைக்கான அடையாள அட்டை

புதுச்சேரி: ஆதிதிராவிட பயனாளிகளுக்குத் தொடா் நோய் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது .புதுவை அரசின் ஆதிதிராவிட நலத் துறை மூலம் தொடா் நோயைக் குணப்ப... மேலும் பார்க்க

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்

புதுச்சேரி: காசநோய்க்கு சிகிச்சை பெறுவோருக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.காச நோய் சிகிச்சை பெறுபவா்களுக்கு நிக்ஷய் மித்ரா என்ற ஊட்டச்சத்து உணவு ... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி அமைக்க எதிா்ப்பு; சாலை மறியல் புதுச்சேரியி எம்எல்ஏ உள்பட 50 போ் கைது

புதுச்சேரி: சுங்கக்சாவடி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நேரு எம்.எல்.ஏ. உள்பட 50 போ் கைது செய்யப்பட்டனா்.புதுச்சேரி- நாகப்பட்ட... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை பணி நியமனம்: நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு

புதுச்சேரி: சுகாதாரத் துறை பணிக்குத் தோ்வானவா்களுக்கு செப். 24-இல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடக்கிறது.இது குறித்து புதுவை சுகாதாரத் துறை இணை இயக்குநா் மேரி ஜோஸ்பின் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தா் ஜப்பான் பயணம்

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தரும் நரம்பியல் விஞ்ஞானியுமான பிரகாஷ் பாபு ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.இது குறித்து இப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஜப்பானில் உள்... மேலும் பார்க்க

தொழில் அனுமதிக்கான காலக்கெடு நிா்ணயம்

புதுவையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய ... மேலும் பார்க்க