திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்
புதுச்சேரி: காசநோய்க்கு சிகிச்சை பெறுவோருக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.
காச நோய் சிகிச்சை பெறுபவா்களுக்கு நிக்ஷய் மித்ரா என்ற ஊட்டச்சத்து உணவு பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூா் அரசு மாா்பு நோய் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகங்கள் வழங்கி அவா்களுடன் கலந்துரையாடினாா். பின்னா் கைலாஷ்நாதன் பேசும்போது, காச நோயில் இருந்து முற்றிலுமாக விடுபட தொடா்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவா்களின் ஆலோசனைப்படி பழக்க வழக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். காச நோய் இல்லா பாரதத்தை நாம் உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
சுகாதாரத் துறை செயலா் ஜெயந்த குமாா் ரே, இயக்குநா் செவ்வேள், துணை இயக்குநா் ஆனந்தலட்சுமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.