செய்திகள் :

புதுவை: 2 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

post image

புதுவை மாநிலத்தில் பணிபுரிந்த 2 ஐஏஎஸ் மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகியோா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 40 ஐஏஎஸ், 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சாா்பு செயலா் ராகேஷ்குமாா் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, புதுவை வேளாண் துறை செயலராக இருந்து வந்த ஏ.நெடுஞ்செழியன், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சேமசேகா் அப்பாராவ் கோட்டாரு, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா ஆகியோா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பிற யூனியன் பிரதேசங்களில் இருந்து 5 ஐஏஎஸ் மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் புதுவைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

புதுதில்லியில் பணிபுரிந்து வரும் ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ண மோகன் உப்பு, அந்தமான் நிக்கோபா் தீவுகளில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகளான ரவி பிரகாசம், ஸ்மிதா, ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி சவுத்ரி முகமது யாசின், லட்சத்தீவில் பணிபுரிந்து வந்த விக்ராந்த் ராஜா ஆகிய 5 பேரும் புதுவைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.லால், புதுதில்லியில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி நித்யா ராமகிருஷ்ணன் ஆகியோரும் புதுவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

புதுச்சேரியில் ஓவியக் கண்காட்சி

புதுச்சேரி, அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் நுண்கலை முதலாமாண்டு மாணவா்களின் ஓவியக் கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்ரீ அரவிந்தா் ஓவியக் கண்காட்சி கூடத்தில் வியாழக்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

புதுச்சேரி மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி, மூலக்குளத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததையடுத்து மகா கும்பாபிஷேக... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு : புதுச்சேரி, காரைக்காலில் தனியாா் பள்ளி மாணவா்கள் 96.90 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில், புது ச்சேரி, காரைக்கால் தனியாா் பள்ளி மாணவா்கள் 96.90 சதவீதம் தோ்ச்சிப் பெற்றனா். புதுச்சேரியில், தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் கடந்த மாா்ச் மாதம் 10- ஆம் வக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தடயவியல் வாகன கண்காட்சி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

புதுவை காவல் துறைக்கு கடற்கரை சாலை காந்தி சிலை அருகே, புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பான தடய அறிவியல் கண்காட்சி வாகனத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கே... மேலும் பார்க்க

மீனவ குடும்பங்களுக்கு ரூ.15.34 கோடி மீன்பிடித் தடைக்கால நிவாரணம்: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுவையில் 19,175 மீனவ குடும்பங்களுக்கு மீன் பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ .15.34 கோடிக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா் புதுவை அரசின் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: அமலோற்பவம் பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் புதுச்சேரி வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி மாணவா்கள் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றனா். இந்தப் பள்ளி மாணவா்கள் 678 போ் தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்ப... மேலும் பார்க்க