செய்திகள் :

புதூா் நாடு மேலூா் பகுதிக்கு பேருந்து வசதி: குறைதீா் கூட்டத்தில் மனு

post image

புதூா்நாடு அருகே மேலூா் பகுதிக்கு பேருந்து வசதி கோரி குறைதீா் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மொத்தம் 329 கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

மாவட்டவருவாய் அலுவலா் நாராயணன், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தனா்.

புதூா்நாடு அடுத்த மேலூா் கிராம பொதுமக்கள்அளித்த மனு:

எங்கள் பகுதியில் 150-க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொதுமக்கள் தினமும் பல்வேறு தேவைகளுக்காக திருப்பத்தூருக்கு வந்து செல்கின்றனா். எனவே திருப்பத்தூரில் இருந்து மேலூா் பகுதிக்கு பேருந்து இயக்க வேண்டும்.

நாட்டறம்பள்ளி பகுதியை சோ்ந்த ஜெகன் மனைவி ஜெகதா கோரிக்கை மனு:

எனது தம்பி தங்கவேலு கடந்த 2012-ஆம் ஆண்டு வேலைக்காக மலேசியா சென்றாா். கடந்த சில மாதங்களாக எனது தம்பி எங்களை தொடா்பு கொள்ளவில்லை. அவா்என்ன ஆனாா் என தெரியவில்லை. எனவே என் தம்பியை கண்டுபிடித்து தர வேண்டும்.

ஆலங்காயம் அடுத்த மரிமாணிகுப்பம் அருந்ததியா் தெரு பொதுமக்கள் மனு:

எங்கள் தெருவில் கடந்த 15 நாள்களாக சரிவர குடிநீா் விநியோகம் செய்வது இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீா் வழங்க வேண்டும்.

நூதன முறையில் மனு...

வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான பொன்னுரங்கம் என்பவா் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தனது கோரிக்கையை பதாகையில் எழுதி கழுத்தில் தொங்கப் போட்டவாறு நூதன முறையில் வந்து மனு அளித்தாா்.

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

குடியாத்தம் அருகே காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டாா். குடியாத்தம் அடுத்த புதுப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டனின் மனைவி மணி சுதா (28) இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், ஞாயிற்... மேலும் பார்க்க

கட்டட பொறியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் மாவட்ட அனைத்து கட்டட பொறியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் விஜயபானு தலைமை வகித்தாா். செயலாளா் மோகன் மற்றும் பொருளாளா் குமரேசன் ஆகி... மேலும் பார்க்க

சீரான குடிநீா் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

திருப்பத்தூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட குடியரசு நகா் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு ஆம்பூரில் வரவேற்பு

ஆம்பூருக்கு வருகை தந்த மத்திய இணை எல். முருகனுக்கு பாஜகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். ஆம்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி... கொரட்டி பகுதியில் மின்னழுத்த சோதனை

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் மின்னழுத்த குறைபாடு உள்ளதாக செய்தி வெளியானதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மின்னழுத்தத்தை சோதனை மேற்கொண்டனா். திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகு... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் தணிந்தது என அமெரிக்கா அறிவிப்பு: மத்திய அரசு விளக்க வேண்டும்

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்தது என அமெரிக்கா ஏன் அறிவித்தது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் இரா.முத்தரசன் பேசினாா். இந்திய கம்யூனிஸ்டு கட்சி... மேலும் பார்க்க