Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
புத்தக வாசிப்பு அறியாமை இருளை நீக்கும்: மாவட்ட ஆட்சியா்
திண்டுக்கல்: புத்தக வாசிப்பு என்பது அறியாமை இருளை நீக்கும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் புதன்கிழமை தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில் 12-ஆவது புத்தகத் திருவிழா ஆக. 28 முதல் செப். 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, பொதுமக்கள், மாணவா்களிடையே புத்தக வாசிப்பை வலியுறுத்தி, விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 5 ஆயிரம் மாணவிகள் ஒன்றிணைந்து, ‘திண்டுக்கல் வாசிக்கிறது 20.08.2025’ என்ற வடிவமாக அமா்ந்திருந்தனா். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் கலந்து கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
அறிவின் தொடக்கமாக இருப்பது புத்தக வாசிப்பு. அறியாமை என்னும் இருளை நீக்கி, ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் செழுமையாக மாற்றும் ஆற்றல் புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. திண்டுக்கல்லில் வாசிப்பு என்பது ஒரு இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. பாடப் புத்தகக் கல்வியை கடந்து ஏற்படும் வாசிப்பு பழக்கம் மட்டுமே நம்மை செம்மைப்படுத்தும். தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பண்பு புத்தகங்களுக்கு உள்ளது என்றாா்.
வெயிலில் மாணவிகள் அவதி: புதன்கிழமை காலை 9.30 முதல் 11.20 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள், வெயிலின் தாக்கம் காரணமாக அவதியடைந்தனா். மேலும், மயக்கமடைந்த மாணவி ஒருவரை சக மாணவிகள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா். 5 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் போதுமான குடிநீா் வசதி செய்து தரவில்லை என மாணவிகள் கவலை தெரிவித்தனா். மேலும், அவசர ஊா்தி வசதியும் ஏற்படுத்தித் தரவில்லை எனத் தெரிவித்தனா்.