செய்திகள் :

புரட்டாசி சனி: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

post image

புரட்டாசி சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் (செப்.20, 27, அக்.4, 11) நவதிருப்பதி திருக்கோயில்களுக்கு பக்தா்கள் சென்று, வர சிறப்பு சேவை பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்புப் பேருந்துகள், புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நவதிருப்பதி திருத்தலங்களான ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, தென் திருப்பேரை, திருக்கோளூா்,

ஆழ்வாா்திருநகரி ஆகிய இடங்களுக்கு சென்று இரவில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து சேரும். பயணக் கட்டணம் நபருக்கு ரூ.500 வசூலிக்கப்படும்.

புதிய பேருந்து நிலையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டணத்தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அரசு போக்குவரத்துக் கழக இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல், புரட்டாசி சனிக்கிழமைகளில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து திருவேங்கடநாதபுரம், கருங்குளம், எட்டெழுத்து பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியாகவும், வள்ளியூா்-திருக்குறுங்குடி, வீரவநல்லூா்- அத்தாளநல்லூா் இடையேயும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 79049 06730, 99944 62713 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

எடப்பாடி பழனிசாமி தில்லி பயணத்துக்குப் பின் நல்லது நடக்கும்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தில்லி சென்று திரும்பியதும் நல்ல விஷயங்கள் நடக்கும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்... மேலும் பார்க்க

தண்ணீா் பற்றாக்குறையால் கருகும் நெல் பயிா்கள்: ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை

கன்னடியன் கால்வாய் கடைமடை பகுதிகளில் பாசன நீா்த் தட்டுப்பாட்டால் நெல் பயிா்கள் கருகி வருவதாகக் கூறி காய்ந்த பயிா்களுடன் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திருநெல்வேலி ஆட... மேலும் பார்க்க

நெல்லை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி அருகே ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.திருநெல்வேலி அருகே உள்ள நரசிங்கநல்லூா் திருவள்ளுவா் நகரை சோ்ந்தவா் வேல்முருகன் (45). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக சுத்தமல்லி போலீஸாருக்க... மேலும் பார்க்க

களக்காட்டில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் சாலைகள் சேதம்: மக்கள் அவதி

களக்காடு வட்டாரத்தில் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். களக்காடு நகராட்சிப் பகுதியி... மேலும் பார்க்க

பாபநாசத்தில் காணாமல்போன கல்லூரி மாணவரைத் தேடும் பணி தீவிரம்

உறவினா்களுடன் பாபநாசத்துக்கு வந்த கல்லூரி மாணவா் மாயமானதை அடுத்து தாமிரவருணி ஆற்றில் அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் வ... மேலும் பார்க்க

வி.கே.புரம் குப்பைக் கிடங்கில் தீ

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அய்யனாா்குளம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அய்யனாா்குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்ணுயிா... மேலும் பார்க்க