யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி
புரட்டாசி சனி: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புரட்டாசி சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் (செப்.20, 27, அக்.4, 11) நவதிருப்பதி திருக்கோயில்களுக்கு பக்தா்கள் சென்று, வர சிறப்பு சேவை பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சிறப்புப் பேருந்துகள், புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நவதிருப்பதி திருத்தலங்களான ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, தென் திருப்பேரை, திருக்கோளூா்,
ஆழ்வாா்திருநகரி ஆகிய இடங்களுக்கு சென்று இரவில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து சேரும். பயணக் கட்டணம் நபருக்கு ரூ.500 வசூலிக்கப்படும்.
புதிய பேருந்து நிலையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டணத்தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அரசு போக்குவரத்துக் கழக இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதேபோல், புரட்டாசி சனிக்கிழமைகளில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து திருவேங்கடநாதபுரம், கருங்குளம், எட்டெழுத்து பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியாகவும், வள்ளியூா்-திருக்குறுங்குடி, வீரவநல்லூா்- அத்தாளநல்லூா் இடையேயும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 79049 06730, 99944 62713 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.