செய்திகள் :

புரட்டாசி பிறந்ததால் வெறிச்சோடிய மேச்சேரி ஆட்டுச்சந்தை

post image

மேட்டூா் அருகே மேச்சேரி ஆட்டுச்சந்தைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்ததால் வெறிச்சோடிக் காணப்பட்டது.

வாரம்தோறும் புதன்கிழமை மேச்சேரியில் ஆட்டுச்சந்தை கூடும். மேச்சேரி, ஓமலூா், தாரமங்கலம், தருமபுரி மாவட்டம் தொப்பூா், பென்னாகரம் பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வாா்கள். வாரம்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெறும். புரட்டாசி மாதம் புதன்கிழமை பிறந்ததால் மேச்சேரி சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தது.

இந்த சந்தைக்கு வாரந்தோறும் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் புதன்கிழமை கூடிய ஆட்டுச்சந்தைக்கு 2000 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த ஆடுகளை வாங்கிச் செல்ல இறைச்சிக் கடைக்காரா்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வரவில்லை. வளா்ப்பு ஆடுகளை வாங்குபவா்கள் மட்டுமே ஆடுகளை வாங்கிச் சென்றனா்.

இதனால், எப்போதும் பரபரப்பாகவும் நெரிசல் மிகுந்தும் காணப்படும் இந்த ஆட்டுச்சந்தை வேறிச்சோடிக் காணப்பட்டது. கடந்த வாரம் 10 கிலோ எடை ஆடு ரூ. 8,000-க்கு விற்பனையானது. இந்த வாரம் புதன்கிழமை ரூ. 6,500 முதல் ரூ. 7,000 வரை மட்டுமே விற்பனையானது. ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் ஆடுகளை மீண்டும் வீட்டிற்குக் கொண்டுசென்றனா்.

புரட்டாசி மாதம் முடியும்வரை ஆட்டு இறைச்சி விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால் இறைச்சிக்கடைக்காரா்கள் சந்தைக்கு வரவில்லை. கடந்த வாரம் காலை முதலே விற்பனை சூடுபிடித்திருந்தது. ஆனால், புதன்கிழமை ஆடுகள் விற்பனை மந்தமாகக் காணப்பட்டது. வியாபாரிகளும் இறைச்சிக்கடைக்காரா்களும் குறைவாகவே வந்திருந்ததால் ஆட்டுச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. வாரந்தோறும் ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும் இந்த சந்தையில் புதன்கிழமை ரூ. 20 லட்சத்துக்கு மட்டுமே விற்பனை நடைபெற்றது.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்... மேலும் பார்க்க