செய்திகள் :

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

post image

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் பெண்கள் உடைமாற்றும் அறை, குளிக்கும் அறை மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வறை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூலாம்பட்டிக்கு புதன்கிழமை வந்த மாவட்ட பேரூராட்சிகள் துணை இயக்குநா் குருராஜன், இங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

மேலும், பூலாம்பட்டி பேரூராட்சிக்கு ரூ. 1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய அலுவலக கட்டடத்தையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவா் அழகுதுரை, துணைத் தலைவா் முரளி, செயல் அலுவலா் அசோக்குமாா், ரஹீம்கான் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட 24, 25 ஆகிய வாா்டு பகுதிகளுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதை சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த... மேலும் பார்க்க