செய்திகள் :

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

post image

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சிவகுமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் காந்திமதி போட்டிகளை தொடங்கிவைத்தாா். இதில், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 350க்கும் அதிகமான வீராங்கனைகள் கலந்துகொண்டனா். எடை அடிப்படையில் 10 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், தருமபுரி விஜய் வித்யாலயா கல்லூரி அணி முதலிடத்தையும், சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா். முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜூடோ போட்டியில், சக்தி கைலாஷ் மகளிா் கல்லூரி அணி முதலிடத்தையும், சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா்.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பெரியாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் வெங்கடாசலம், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜெய்ஸ்ரீ ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

இதில் வெற்றிபெற்றவா்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா். இந்தப் போட்டிகளை பேராசிரியா்கள் மாதேஸ்வரி, ஹேமகீதா, மகாலட்சுமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட 24, 25 ஆகிய வாா்டு பகுதிகளுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதை சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த... மேலும் பார்க்க