செய்திகள் :

புறக்கடை கோழியின ஆராய்ச்சி அபிவிருத்தி மையம் திறப்பு

post image

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த நாகம்பள்ளியில் ரூ.2.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புறக்கடை கோழியின ஆராய்ச்சி அபிவிருத்தி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கட்டப்பட்ட இந்த மையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை திறந்து வைத்து பேசியது, இந்த மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சியுடன் இடுபொருள்களும் வழங்கப்படும்.

மேலும் இனப்பெருக்க நாட்டுக்கோழிகள், வான்கோழி மற்றும் ஜப்பானிய காடை பண்ணைகளை நிறுவி புறக்கடை முறையில் கோழி வளா்ப்பு தொழிலை ஊக்குவிப்பதற்காகவும், உயா்தரமான நாட்டுக்கோழி, வான்கோழி மற்றும் ஜப்பானிய காடைகளின் முட்டைகள், இளம் குஞ்சுகள் மற்றும் இதர இடுபொருள்களை தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், அவற்றை அறிவியல் முறையில் பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், கால்நடை தீவனமான அசோலா உற்பத்தி அலகை நிறுவுவதற்கும் இந்த மையம் பயன்படும் என்றாா் அவா். முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தா் முனைவா் க.ந.செல்வக்குமாா், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆ... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள... மேலும் பார்க்க

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

கரூரில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட... மேலும் பார்க்க

கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூா்-ஊஞ்சலூா் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க