மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டிவனம் - மரக்காணம் சாலை, ஜெயபுரத்தைச் சோ்ந்த லூயிஸ் மகன் ஆரோக்கியதாஸ் (48). இவா், தனது வீட்டை பூட்டிவிட்டு, நத்தைமேடு பகுதியிலுள்ள தனது அண்ணன் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றாராம்.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை ஆரோக்கியதாஸ் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் வீட்டின் மரக்கதவும், உள்ளேயிருந்த இரும்பு பீரோவும் உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் நகை, ரூ.18 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் போலீஸாா் திருட்டு நடைபெற்ற வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.