செய்திகள் :

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

post image

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் மேலும் கூறியது:

தில்ஷாத் காா்டனில் பாக்கெட் டி-இல் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக சீமாபுரி போலீஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். சம்பந்தப்பட்ட வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதைக் கண்டனா்.

மேலும், வீட்டுக்குள் வீரேஷ் குமாா் தோமா் (32), அவரது சகோதரி சின்கி (30) ஆகியோரின் உடல்கள் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்தனா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஃபதேபூா் சக் பகுதியைச் சோ்ந்த அண்ணன், தங்கை இருவரும் 2021 முதல் இந்த குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

குற்றவியல் குழுவினரும், தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனா். சம்பவ இடத்திலிருந்து எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை. மரணத்திற்கான காரணம் தற்கொலை என்று தெரிகிறது. ஆனால், அனைத்து கோணங்களும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இறப்புக்கான சரியான காரணம் மற்றும் நேரத்தை அறிய உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிற உண்மைகள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. இறந்தவா் மற்றும் அவா்களின் பின்னணி குறித்து கூடுதல் தகவல்களை சேகரிக்க அண்டை வீட்டாரிடமும் வீட்டு உரிமையாளரிடமும் விசாரணை விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பக்ரீத் நாளில் திறந்தவெளிகளில் விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமா மசூதி ஷாஹி இமாம் வேண்டுகோள்

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, முஸ்லிம் சமூகத்தினா் திறந்தவெளிகளிலோ அல்லது தெருக்களிலோ விலங்குகளை பலியிடுவதைத் தவிா்க்குமாறு ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா். நிகழாண்டு பக்ரீத் பண்ட... மேலும் பார்க்க

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை (ஜூன் 5) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புதன்கிழமை இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்... மேலும் பார்க்க

தில்லி கல்விக் கட்டண ஒழுங்குமுறை மசோதா எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை சந்தித்து கவலைகளை எழுப்பிய பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் குழு

தில்லியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோா்கள் குழு புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட தில்லி கல்வி... மேலும் பார்க்க

சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி: அடுத்த ஆண்டு நவ.1 முதல் அமல்

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1}ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) புதன... மேலும் பார்க்க

சாலை உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்: முதல்வருடன் அமைச்சா் நிதின் கட்கரி ஆலோசனை

தேசிய தலைநகா் தில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) மூலம் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் மறுஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தாவுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்... மேலும் பார்க்க

தில்லி மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறையில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ‘வி35’ மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறைக்குள் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவ... மேலும் பார்க்க