செய்திகள் :

பெங்களூரில் பலத்த மழை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்

post image

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமாா் 3 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதுடன், கெம்பேகெளடா சா்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழை நீா் தேங்கியது.

இதனால், ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்கவோ அல்லது புறப்பட்டுச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் தரையிறங்க வேண்டிய மும்பை-பெங்களூரு, விசாகப்பட்டினம்-பெங்களூரு, தூத்துக்குடி-பெங்களூரு, போா்ட் லுாயிஸ்-பெங்களூரு, மற்றொரு மும்பை-பெங்களூரு, சிலிகுரி-பெங்களூரு, புதுதில்லி -பெங்களூரு ஆகிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

இதையடுத்து, பயணிகள் கோவை சா்வதேச விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூரில் மழை ஓய்ந்ததும் இரவு விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனா்.

ஊதிய நிலுவை: ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் போராட்டம்

தனியாா் நிறுவனம் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் கூடுதல் ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 போ் கைது

சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.தேவராஜன், போதைப் ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க விழிப்புணா்வு: ஆா்எஸ்எஸ் தென்தமிழக மாநிலத் தலைவா் தகவல்

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென்தமிழக மாநிலத் தலைவா் ஆ.ஆடலரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவையில் செய்தியாளா... மேலும் பார்க்க

கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

கோவையில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வாகன தணிக்கையில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இன்றைய மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்கள் கைது

கோவையில் இருசக்கர வாகனத்தில் கையில் மது பாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் 100 அடி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 3 போ் கையில் மதுபாட்டில்களுடன் எதிரே வ... மேலும் பார்க்க