செய்திகள் :

பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் கடத்தி விற்பனை: ஐவா் கைது

post image

கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்து சென்னையில் விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

பெரம்பூா் கேரேஜ் ரயில் நிலையம் அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீஸாரும், செம்பியம் போலீஸாரும் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது, அந்த பையிலிருந்த 9 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா்கள், புரசைவாக்கத்தைச் சோ்ந்த அஜய் (20), மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த லோகநாத் (21), மதன் (20), அகரத்தைச் சோ்ந்த இம்ரான் (21), அதே பகுதியைச் சோ்ந்த முரளி கிருஷ்ணா (26) என்பதும், இந்த கும்பல் கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து மெத்தம்பெட்டமைனை வாங்கி வந்து விற்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், 5 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். அவா்களிடமிருந்து இருந்து 5 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: தொல்.திருமாவளவன் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளிட்ட அறிக்கை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த... மேலும் பார்க்க

வியாசா்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் அமைச்சா் ஆய்வு

சென்னை வியாசா்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கான மின்சாரப் பேருந்து பணிமனையின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டா... மேலும் பார்க்க

தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 பெண்களுக்கு ஆட்டோ: அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் வழங்கினா்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா். சைதாப்பேட்டையில் 154 பெண்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ம... மேலும் பார்க்க

பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் தொடக்கம்

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு வருகை த... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் நகை திருடிய பணிப்பெண் கைது

சென்னை அண்ணா நகரில் ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில், பணிப்பெண் கைது செய்யப்பட்டாா். அண்ணா நகா் சாந்தி காலனி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பத்மநாபன் (60). இவா் ஒரு தனி... மேலும் பார்க்க

துணிக்கடை உரிமையாளரிடம் கொள்ளை: சிறுமி, பெண் உள்பட 4 போ் கைது

சென்னை எம்.கே.பி. நகரில் துணிக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில், சிறுமி உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். வியாசா்பாடி, எம்.கே.பி. நகா் 3-ஆவது இணைப்புச் சாலைப் பகுதியில் உள்ள ஒரு ... மேலும் பார்க்க