செய்திகள் :

பெங்களூரு: குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு !

post image

பெங்களூரில் குப்பை லாரியில் இருந்து இளம் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சன்னம்மனகெரே ஸ்கேட்டிங் திடல் அருகே உள்ள ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) குப்பை லாரியின் பின்புற லிப்டில் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண் சுமார் 25-30 வயதுடையவர் என்று நம்பப்படுகிறது. அவரது அடையாளம் இன்னும் தெரியவில்லை.

மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நேற்று இரவு, குப்பை சேகரிக்கும் லாரிக்குள் ஒரு சடலம் இருப்பதைக் கண்டோம். அதிகாலை 1 முதல் 3 மணிக்குள், யாரோ ஒரு பெண்ணின் உடலை அப்புறப்படுத்தி, பையில் அடைத்து லாரியில் வீசினர்,” என்று கூறினார்.

“கழுத்துடன் அவரது கால்கள் கட்டப்பட்டு உடல் ஒரு பையில் அடைக்கப்பட்டு, குப்பை லாரியில் வீசப்பட்டது. பிபிஎம்பி குப்பை லாரி ஓட்டுனர் அதைக் கவனித்து எங்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில், நாங்கள் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றார்.

கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்தார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவு 12:30 மணி முதல் 12:40 மணி வரை ஆகிய இடைப்பட்ட நேரத்தில் உடலை லாரியில் வீச வந்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Summary

The dead body of a woman was found in the back of a garbage truck near a skating rink in Bengaluru on Saturday night. Preliminary investigation suggests that the woman may have been sexually assaulted before being murdered.

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா! வீண் புரளிகளுக்குப் பதில்!

மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதை ஒன்றாகக் கைகோர்த்தபடி வெளிப்படுத்தியுள்ளனர்.கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? என்ற சந... மேலும் பார்க்க

புரி நெரிசல் பலி! முதல்வர், துணை முதல்வர் விலக வேண்டும்: காங்கிரஸ்

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்தனர்.... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும்... மேலும் பார்க்க

ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வு!

ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.நாளை முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 2,501 ஆக உயர்ந்த கரோனா!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கரோனா தொற்று நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், ஒருசில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி வருக... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலையில் வெடி விபத்து: 12 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், மடக் மாவட்டத்தில் உள்ள பஷ்யல்ராம் பகுதியில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சங்கரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் மருந்... மேலும் பார்க்க