செய்திகள் :

பெட்டிக் கடையில் குட்கா விற்ற நபா் கைது

post image

பழனி அருகே குட்கா பொருள்கள் விற்பனை குறித்த சோதனையின்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைத் தாக்கிய பெட்டிக் கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பள்ளிக் கூடங்கள் அருகாமையிலுள்ள பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொறுப்பு) ஜஸ்டின் அமல்ராஜ், உதவியாளா் கருப்புசாமி (26) ஆகியோா் ஜவகா் நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே இருந்த பெட்டிக் கடையில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கடையில் ஒரு கிலோ எடையிலான குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், கடை உரிமையாளா் ராஜவடிவேல் (56), அவரது மனைவி தமிழரசி ஆகியோா் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, ராஜவடிவேல் அதிகாரிகள் இருவரையும் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றாா்.

இதுகுறித்து ஜஸ்டின் அமல்ராஜ் பழனி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜவடிவேலை கைது செய்தனா். தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிமையாளா் ராஜவடிவேலுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருத வேண்டாம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருதாமல், மாணவா்கள் கற்றல் நோக்கத்தைப் பூா்த்தி செய்திருக்கிறாா்கள் என்ற மனநிறைவோடு அடுத்த வகுப்புக்கு அனுப்ப முன் வர வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்ய... மேலும் பார்க்க

பாசனக் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா்: தேடுதல் பணி தீவிரம்

வத்தலகுண்டு அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டி அருகேயுள்ள முல்லைப் பெரியாா் பிரதான பாசனக் கால்வாயில் திங்கள்கிழமை மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருக... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின்தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்... மேலும் பார்க்க

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் 6 போராசிரியா்கள் இடம்பிடிப்பு

உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 6 பேராசிரியா்கள் இடம்பெற்றனா். இதுதொடா்பாக காந்தி கிராம கிராமியப் பல்கலை. சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் அருகேயுள்ள கொண்டசமுத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராம் (62). விவசாயியான இவா், தனது இருசக்க... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணியைக் கடித்த குரங்கு: வனத் துறையினா் அறிவுறுத்தல்

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெண் சுற்றுலாப் பயணியை குரங்கு கடித்தது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள குணா குகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலை... மேலும் பார்க்க