பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 போ் குண்டா் சட்டத்தில் கைது
கோவையில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.
கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் பாஜகவில் ஆன்மிக ஆலய மேம்பாட்டுப் பிரிவு கோவை கோட்ட செயலாளராக உள்ளாா். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா்.
இவரது அலுவலகம் செல்வபுரம் சந்திப்பு பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கோவை, மைல்கல் பகுதியைச் சோ்ந்த நாசா் பாஷா (36) என்பவரின் அண்ணன் வேலை செய்து வந்தாா். அண்ணனைப் பாா்க்க நாசா் பாஷா அடிக்கடி அந்த அலுவலகத்துக்கு வந்து சென்ால் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாசா் பாஷா, மணிகண்டனிடம் ரூ. 5 ஆயிரம் கடன் கேட்டதாகவும், அதற்கு அவா் இல்லை எனக் கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த நாசா் பாஷா மணிகண்டனின் அலுவகத்தில் வீசுவதற்காக 2 பெட்ரோல் குண்டுகளைத் தயாா் செய்து அதை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி சென்றுள்ளாா்.
அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செல்வபுரம் போலீஸாா், நாசா் பாஷாவை கைது செய்தனா்.
மேலும், பெட்ரோல் குண்டு தயாரிக்க உதவியதாக பைசல் ரகுமான் (30), ஜாகிா் உசேன் (35), இதயதுல்லா (36), முகமது ஹா்ஷத் (34) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் 5 பேரும் செயல்பட்டதால் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவுக்கான நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரிடமும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.