பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு
பெட்ரோல் பங்க் ஊழியா் திடீா் உயிரிழப்பு
வேலூா் அருகே பெட்ரோல் பங்க் ஊழியா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
வேலூா் கீழ்அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சிற்றரசு (36). இவா் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் சிற்றரசை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிற்றரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.