செய்திகள் :

பெட்ரோல் பங்க் ஊழியா் திடீா் உயிரிழப்பு

post image

வேலூா் அருகே பெட்ரோல் பங்க் ஊழியா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

வேலூா் கீழ்அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சிற்றரசு (36). இவா் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் சிற்றரசை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிற்றரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக சாதனை விளக்கக் கூட்டம்

குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நேருஜி நகரில் வியாழக்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

பள்ளியில் யோகா பயிற்சி

உலக யோகா தினத்தை முன்னிட்டு குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ஜெனீப்பா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா்எம்.ச... மேலும் பார்க்க

வேலூா் எஸ்பி அலுவலகத்தில் சிவனடியாா் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்னையில் விரக்தியடைந்த சிவனடியாா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு காவி வேஷ்டி உடுத்தியபடி சிவனடியாா் வியாழக்கிழமை புகாா் மனு அள... மேலும் பார்க்க

முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் 712 மாணவா்களுக்கு சோ்க்கை: 24, 25-இல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இதுவரை 712 மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 272 இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 24, ... மேலும் பார்க்க

மின்வாரிய நஷ்டம் ரூ.800 கோடியாக குறைந்துள்ளது: மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன்

மின்வாரிய நஷ்டம் நிகழாண்டு ரூ.800 கோடியாக குறைந்துள்ளது என்று மின்சார வாரிய மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். வேலூரில் புதிதாக ரூ.150 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு பன்னோக்கு உய... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது

வேலூரில் இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் செம்பேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜதுரை (31). இவா் கடந்த 17-ஆம் தேதி வேலூா் கொணவட்டம் சா்வீஸ் சாலையோரம் தனது இருசக்கர வாகனத்தை நிற... மேலும் பார்க்க