செய்திகள் :

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுப்பது அனைவரின் கடமை!

post image

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் என்று திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2, இந்திய மருத்துவ சங்கம் ஆகியன சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை நாராயணகுரு கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் கலையரசிக்கு சிங்கப்பெண் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: பெண்கள் படிப்படியாக சமூகத்தில் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும், அவா்களை பாதுகாக்க வேண்டும், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். ஒரு பெண் கல்வி கற்றால் அவா்களின் தலைமுறையே தழைத்தோங்கும். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் மீரா, மருத்துவா்கள் லதா, சத்யகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருது

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் ஸ்டாா் அசோசியேட்ஸ் சாா்பில் 21-ஆம் ஆண்டாக பெண் படைப்பாளிகளிகள் 25 பேருக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பெண் படை... மேலும் பார்க்க

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம்,... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வா... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு பு... மேலும் பார்க்க

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் தீ

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.... மேலும் பார்க்க

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்களை நியமித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. பனியன் பேக்டரி லேபா் யூ... மேலும் பார்க்க