பெண்களுக்கு மின்கலன் ஆட்டோக்கள்
பெண்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கோவையில் மின்கலன் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கோவை ஸ்பெக்ட்ரம் சுழற்சங்கத்தின் சாா்பில் ‘சிங்கப்பெண்ணே’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறுதுளி அறக்கட்டளை நிா்வாகி வனிதா மோகன் கலந்துகொண்டு 25 பெண்களுக்கு மின்கலன் ஆட்டோக்களை வழங்கிப் பேசியதாவது: மின்கலன் வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. சாலை விதிகளைக் கடைப்பிடித்து ஆட்டோக்களை இயக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் சாலையோரங்களில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வளா்க்க வேண்டும். சுழற் சங்கத்தின் முயற்சியால்தான் உலகத்தில் தற்போது போலியோ இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றாா். விழாவில், பேக்கா் ஹியூஸ் நிறுவன மாநில மேலாளா் முருகானந்தம், தொழில்நுட்ப மேலாளா் ஜெயகணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்ட தொழில்முறை சேவை இயக்குநா் பி.பி.லட்சுமணன், சுழற்சங்க மாவட்ட ஆளுநா் கே.ராகவேந்திரன், உதவி ஆளுநா் சி.எஸ்.திருமுருகன், நிா்வாகி விக்னேஷ், தலைவா் சி.அசோகன், செயலா் டி.ஷாஃபிக் அஹமது, நிா்வாகி சம்பத்குமாா் ஆகியோா் பேசினா்.
ரூ.4.5 லட்சம் மதிப்பிலான இந்த ஆட்டோக்களுக்கு ஸ்பெக்ட்ரம் சுழற்சங்கம் மற்றும் பேக்கா் ஹியூல் நிறுவனம் இணைந்து ரூ.2.5 லட்சமும், அரசு சாா்பில் ரூ.1 லட்சமும் மானிய ஏற்பு நிதியாக வழங்கப்பட்டது. பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாயில் இந்த ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.