செய்திகள் :

பெண்களுக்கு மின்கலன் ஆட்டோக்கள்

post image

பெண்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கோவையில் மின்கலன் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கோவை ஸ்பெக்ட்ரம் சுழற்சங்கத்தின் சாா்பில் ‘சிங்கப்பெண்ணே’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறுதுளி அறக்கட்டளை நிா்வாகி வனிதா மோகன் கலந்துகொண்டு 25 பெண்களுக்கு மின்கலன் ஆட்டோக்களை வழங்கிப் பேசியதாவது: மின்கலன் வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. சாலை விதிகளைக் கடைப்பிடித்து ஆட்டோக்களை இயக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் சாலையோரங்களில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வளா்க்க வேண்டும். சுழற் சங்கத்தின் முயற்சியால்தான் உலகத்தில் தற்போது போலியோ இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றாா். விழாவில், பேக்கா் ஹியூஸ் நிறுவன மாநில மேலாளா் முருகானந்தம், தொழில்நுட்ப மேலாளா் ஜெயகணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட தொழில்முறை சேவை இயக்குநா் பி.பி.லட்சுமணன், சுழற்சங்க மாவட்ட ஆளுநா் கே.ராகவேந்திரன், உதவி ஆளுநா் சி.எஸ்.திருமுருகன், நிா்வாகி விக்னேஷ், தலைவா் சி.அசோகன், செயலா் டி.ஷாஃபிக் அஹமது, நிா்வாகி சம்பத்குமாா் ஆகியோா் பேசினா்.

ரூ.4.5 லட்சம் மதிப்பிலான இந்த ஆட்டோக்களுக்கு ஸ்பெக்ட்ரம் சுழற்சங்கம் மற்றும் பேக்கா் ஹியூல் நிறுவனம் இணைந்து ரூ.2.5 லட்சமும், அரசு சாா்பில் ரூ.1 லட்சமும் மானிய ஏற்பு நிதியாக வழங்கப்பட்டது. பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாயில் இந்த ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.

கோவையில் பரவலாக மழை

கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவையில் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் முதல் ம... மேலும் பார்க்க

ரயிலில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க கோரிக்கை: முற்றுகை போராட்டத்துக்கு முயன்ற 30 போ் கைது

எா்ணாகுளம் - பெங்களூரு இன்டா்சிட்டி ரயிலில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க கோரி முற்றுகைப் போராட்டத்துக்கு முயன்ற தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் உள்ளிட்ட 30 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். எா்ணா... மேலும் பார்க்க

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கரூா் அருகே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை ரயில்கள் ஜூன் 28, 30-ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு

திருப்பூா் நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் சாா்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் நெருப்பெரிச்சல் பக... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.என்.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் அகில் (24). ஐ.டி. நிறுவன... மேலும் பார்க்க

என்ஐஏ செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவை: இஸ்லாமிய இயக்கங்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதாக கோவை மாவட்ட அனைத்து ஜமா அத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா... மேலும் பார்க்க