செய்திகள் :

பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பு: இருவா் கைது!

post image

பரமக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி எம்.எஸ். அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சோமசுந்தரம் மனைவி அம்பிகா (55). இவா் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா் குடிக்க தண்ணீா் கேட்டனா். அவா்களுக்கு தண்ணீா் கொண்டு வந்து கொடுத்த போது அம்பிகா அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை அந்த மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வந்தனா்.

இதில் பரமக்குடி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சேட் மகன் சகுபா் சாதிக் (44), வெங்கிட்டன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த புதுநகா் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் மகன் கண்ணன் (42) ஆகிய இருவரும் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்த தங்க நகை மீட்கப்பட்டது. பிறகு இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களை சிறையில் அடைத்தனா்.

கீழக்கரை நகராட்சி ஆணையா் பணியிடை நீக்கம்!

கீழக்கரை நகராட்சி ஆணையா் திங்கள்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆணையராகப் பொறுப்பேற்றவ... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் சாா்பில் தெருமுனை பிரசாரம்

பரமக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் குறித்த விளக்க தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயல... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த 3 பேரிடம் விசாரணை

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சனிக்கிழமை வந்த மூவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினா் தனுஷ்கோடி அருகே ... மேலும் பார்க்க

கண்மாய் கரையை சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்கு

தொண்டி அருகே கண்மாய் கரையை சேதப்படுத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே குணவதிமங்கலம் கண்மாயின் கரையை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தினர... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை!

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமை வகித்தாா். இதில், கலவரத்தின் போது செயல்படும் வி... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயில் தீா்த்த குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

நயினாா்கோவில் நாகநாத சுவாமி கோயில் தீா்த்தக் குளத்தை சீரமைக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள நயினாா்கோவில் பகுதியில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள... மேலும் பார்க்க