செய்திகள் :

பெண்ணின் உயிரை மாய்த்த போக்குவரத்து நெரிசல்! கணவர் கண்முன்னே துடிதுடித்து பலி!

post image

மகாராஷ்டிரத்தில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதில், சிகிச்சைக்கு சென்று கொண்டிருந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பால்கர் மாவட்டத்தில் சாயா பூரவ் (49) என்பவரின் வீட்டின் அருகே மரத்தின் கிளை முறிந்து, அவர் மீது விழுந்ததில், அவரின் தலை, தோள், இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரின் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மும்பையில் இருந்த இந்துஜா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, 100 கி.மீ. தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு செல்ல, சாயாவுக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸில் அவரது கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். பிற்பகல் 3 மணியளவில் தொடங்கப்பட்ட ஆம்புலன்ஸ் பயணம், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. பொதுவாக, 100 கி.மீ. தொலைவை 2.5 மணிநேரத்தில் கடக்க முடியும் என்ற நிலையில், அப்போதைய போக்குவரத்து நெரிசலால் 3 மணிநேரத்தில் (மாலை 6 மணியளவில்) 50 கி.மீ. தொலைவை மட்டுமே கடக்க முடிந்திருந்தது. இதனிடையே, சாயாவுக்கு அளிக்கப்பட்ட மயக்க மருந்தின் தாக்கம் குறையத் தொடங்கி, சாயா மிகுந்த வலியால் அவதிப்பட்டார்.

சாயாவின் வலி அவதி அதிகரிக்கத் தொடங்கியதால், இந்துஜா மருத்துவமனைக்கு 30 கி.மீ. முன்னதாகவே இருந்த வேறொரு மருத்துவமனையில் சாயாவை சிகிச்சைக்காக இரவு 7 மணியளவில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், சாயாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். 30 நிமிடங்கள் முன்னதாக அழைத்து வந்திருந்தால், சாயாவை காப்பாற்றியிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

இந்தச் சம்பவம் குறித்து, சாயாவின் கணவர் கூறுகையில், சாயாவை காப்பாற்ற முடிந்தவரையில் முயற்சி செய்தோம். ஆனால், போக்குவரத்து நெரிசலால் அவரின் உயிர் பறிபோனது. சாலையில் இருந்த குழிகளும் பள்ளங்களும் சாயாவின் வலியை வேதனைக்குள்ளாக்கியது. தவறான பாதைகளிலிருந்து (Wrong Way) வாகனங்களை இயக்கினர். நான்கு மணிநேரமாக அவர் தாங்க முடியாத வலியால் அவதியுற்று, கதறி அழுதார். தன்னை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சினார் என்று தெரிவித்தார்.

Woman Dies En Route To Hospital After Ambulance Gets Stuck In Traffic Jam For Hours

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உத்தர பிரதேச மா... மேலும் பார்க்க

‘5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாதது ஏன்?’- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சம்மன்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகள் மீது இன்னும் பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, மாநில ... மேலும் பார்க்க

ஹைதராபாத் நகைக்கடையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் துப்பாக்கியால் ச... மேலும் பார்க்க