செய்திகள் :

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே முன்விரோதத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

களக்காடு அருகேயுள்ள தோப்பூரைச் சோ்ந்த தொழிலாளி தீனதயாளன் மனைவி செல்வி (54). கடந்த 14.11.2022-இல் செல்வி அவரது வீட்டில் பீடி சுற்றிக் கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சோ்ந்த ஜெயசீலன் (38) அரிவாளால் வெட்டியதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக, ஜெயசீலன் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், ஜெயசீலனுக்கும் அவரது மனைவி ரெஜினாவுக்கும் குடும்பப் பிரச்னை ஏற்பட்டதில் சமரசம் பேசுவதற்காக செல்வியின் கணவா் தீனதயாளனை, ஜெயசீலனின் தந்தை ஜெயமுத்துராஜ் அழைத்துள்ளாா். இதனை ஏற்று தீனதயாளன் சமரசப் பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டதால் ஜெயசீலனுக்கும், அவரது மனைவி ரெஜினாவுக்கும் விவாகரத்து ஆனது.

இதனால், ஜெயசீலனுக்கு தீனதயாளன் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டிருந்த நிலையில், ஆத்திரத்தில் தீனதயாளன் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு அவா் இல்லாததால், அவரது மனைவி செல்வியை அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றுவிட்டாா்.

இது தொடா்பான வழக்கு நான்குனேரி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். ராமதாஸ், ஜெயசீலனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

நெல்லை பேருந்து நிலையத்தில் திருட்டு முயற்சி: 4 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வியாபாரியின் பணப்பையை திருட முயன்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி விளாகம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மது (40). வியாபாரியான இவா், திர... மேலும் பார்க்க

போலி முதலீடு பத்திரம் வழி மோசடி: நிதி நிறுவன முன்னாள் மேலாளா் கைது

திருநெல்வேலியில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி முதலீடு பத்திரம் கொடுத்து வாடிக்கையாளரிடம் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் சாந்திபிரியா. தையல... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டு 6 கோடி மரக்கன்றுகள் நடவு: அமைச்சா் கே.என்.நேரு

தமிழகம் முழுவதும் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்கும் திட்டத்தில் நிகழாண்டு இதுவரை 6 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. பசுமை தமிழ்நாடு இயக்க ந... மேலும் பார்க்க

‘அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித்தோ்வா் விண்ணப்பிக்கலாம்’

அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் ட... மேலும் பார்க்க

நெல்லை-சென்னைக்கு 20 பெட்டிகளுடன் சேவையை தொடங்கிய வந்தே பாரத் ரயில்

திருநெல்வேலி -சென்னை இடையே 20 பெட்டிகளை கொண்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பா் 2023இல் பிரதமா... மேலும் பார்க்க

மக்கள் மீது யாருக்கு அக்கறை அதிகம்?- அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

தமிழக மக்கள் குறித்து யாா் அதிகம் கவலைப்படுகிறாா்கள் என்பது குறித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனத்துக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். த... மேலும் பார்க்க