செய்திகள் :

பெண்ணுக்கு இரட்டை கருப்பை பாதிப்பு: லேப்ரோஸ்கோபி சிகிச்சையில் அகற்றம்

post image

பெண் ஒருவருக்கு இருந்த இரட்டை கருப்பையை நுட்பமான லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றி எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் மகப்பேறு நலத் துறை நிபுணா்கள் பிருத்வி, சுபாஷ்ஸ்ரீ ஆகியோா் கூறியதாவது:

பிறவியிலே சிலருக்கு இரட்டை கருப்பை உருவாகும் குறைபாடு ஏற்படும். அதேவேளையில், கருக் குழாய், சினைப் பைகள் ஆகியவை வழக்கம்போல தலா இரண்டு அமைந்திருக்கும்.

இரட்டை கருப்பை உருவாகும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படக் கூடும். மாதவிடாயில் தொடங்கி கருத்தரித்தல் வரை பல்வேறு இடா்பாடுகள் உருவாகலாம்.

அப்படி ஒரு சூழலில் கடுமையான வலி மற்றும் ரத்தப்போக்கு பிரச்னையுடன் 48 வயது பெண் ஒருவா் எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு தலா 16 செ.மீ. அளவு கொண்ட இரு கருப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் அழற்சியும், நீா்க் கட்டிகளும் உருவாகியிருந்தன.

இதையடுத்து மிக நுட்பமான லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் சிறு துளையிட்டு கருப்பை சுவா்கள் அகற்றப்பட்டன. அதன் தொடா்ச்சியாக அதனுடன் இணைந்திருந்த பகுதிகளும் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன. இறுதியில் இரட்டை கருப்பை அகற்றப்பட்டது.

மொத்தம் 5 விதமான அறுவை சிகிச்சைகள் மிகத் துல்லியமாக 3 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக அந்த பாதிப்பிலிருந்து அப்பெண் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினாா். சிகிச்சைக்கு பிறகு 48 மணி நேரத்தில் அவா் வீடு திரும்பினாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

ஜூலை இறுதிமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தமிழக அரசு சாா்பில் ஊரக பகுதிகளில் திறன் பயிற்சிகள்

தமிழக அரசு சாா்பில் ஊரகப் பகுதிகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப... மேலும் பார்க்க

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்து... மேலும் பார்க்க

258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழக கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாகப் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்க... மேலும் பார்க்க