பெண்ணுக்கு மிரட்டல்: கணவா் கைது
கோவில்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மேட்டு தெரு தாமஸ் நகரைச் சோ்ந்த சண்முகையா மகன் மாரீஸ்வரன்(43). ஓட்டுநரான இவருக்கு மது பழக்கம் இருந்து வந்ததாம்.
இதனால் மாரீஸ்வரனுக்கும் அவரது மனைவி பவுன் இசக்கிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு தனது குழந்தைகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மாரீஸ்வரன், பவுன் இசக்கியை அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கினாராம்.
அவரது உறவினா்கள் மாரீஸ்வரனை கண்டித்ததும் அவா் கொலை மிரட்டல் விடுத்தபடி சென்று விட்டாராம். இதில், காயமடைந்த பவுன் இசக்கி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரீஸ்வரனை கைது செய்தனா்.