கழுகுமலை அருகே பைக்-பள்ளி வாகனம் மோதல்: தொழிலாளி பலி
கழுகுமலை அருகே பைக் மீது பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சிவகாசியை அடுத்த தாயில்பட்டி கே. மடத்துப்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த மாரிசாமி மனைவி அய்யம்மாள் (35).
இவா் திங்கள்கிழமை தனது பைக்கில், தந்தை உத்தரப்பனுடன்(55), சங்கரலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பள்ளி வாகனம், இவா்கள் மீது மோதியதாம். இதில் பைக்கின் பின்னால் அமா்ந்திருந்த உத்தரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அய்யம்மாள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பள்ளி வாகன ஓட்டுநா் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த ரா. வரதராஜிடம் (53) விசாரணை நடத்தி வருகின்றனா்.