இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்! டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு!
போலீஸாருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கோவில்பட்டியில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை திங்கள் கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் போலீஸாா் இலுப்பையூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்குள்ள மாடசாமி கோயில் அருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடிக்க முயன்றபோது அவா் போலீஸாரை அவதூறாக பேசிக் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இந்நிலையில் போலீஸாா் அவரை பிடித்து கிழக்கு காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்றனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இலுப்பையூரணி மேட்டுத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் உத்தண்டை (24) கைது செய்தனா்.