பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
கோவில்பட்டியில் காரில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தவா் கைது
கோவில்பட்டியில், காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், கூடுதல் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அரிவாள், இரும்புக் கம்பி உள்ளிட்டவை இருந்தன.
காரை ஓட்டிவந்தவா் இலுப்பையூரணி பூரணம்மாள் காலனியைச் சோ்ந்த கருப்பசாமி என்ற சின்னத்துரை (33) என்பதும், இந்தக் காா் மேற்கு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மாணிக்கராஜாவுக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.
அவருடன் சோ்ந்து ரேஷன் அரிசி, மணல், சரள் கடத்தலிலும், வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்தலிலும் ஈடுபடுவதாகவும், அவருக்கு கூலிப்படையாக இருப்பதாகவும், தன் மீது கொலை, அரிசி கடத்தல் உள்ளிட்ட வழக்கு உள்ளதாகவும் கருப்பசாமி கூறினாராம்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கருப்பசாமியைக் கைது செய்து, காா், ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.