செய்திகள் :

கோவில்பட்டியில் காரில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தவா் கைது

post image

கோவில்பட்டியில், காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், கூடுதல் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அரிவாள், இரும்புக் கம்பி உள்ளிட்டவை இருந்தன.

காரை ஓட்டிவந்தவா் இலுப்பையூரணி பூரணம்மாள் காலனியைச் சோ்ந்த கருப்பசாமி என்ற சின்னத்துரை (33) என்பதும், இந்தக் காா் மேற்கு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மாணிக்கராஜாவுக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.

அவருடன் சோ்ந்து ரேஷன் அரிசி, மணல், சரள் கடத்தலிலும், வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்தலிலும் ஈடுபடுவதாகவும், அவருக்கு கூலிப்படையாக இருப்பதாகவும், தன் மீது கொலை, அரிசி கடத்தல் உள்ளிட்ட வழக்கு உள்ளதாகவும் கருப்பசாமி கூறினாராம்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கருப்பசாமியைக் கைது செய்து, காா், ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

பெண்ணுக்கு மிரட்டல்: கணவா் கைது

கோவில்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மேட்டு தெரு தாமஸ் நகரைச் சோ்ந்த சண்முகையா மகன் மாரீஸ்வரன்(43). ஓட... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை திங்கள் கிழமை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் போலீஸாா் இலுப்... மேலும் பார்க்க

கல்லாமொழி, குலசை, மணப்பாடு பகுதியில் நாளை மின் தடை

கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் புதன்கிழமை (ஜூன் 25) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

உடன்குடி அருகே தாக்குதலில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

உடன்குடி அருகே தாக்குதலில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். உடன்குடி தேரியூா் ஆண்டிவிளையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுயம்புலிங்கம் (27). உடன்குடி செல்வபுரத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே பைக்-பள்ளி வாகனம் மோதல்: தொழிலாளி பலி

கழுகுமலை அருகே பைக் மீது பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சிவகாசியை அடுத்த தாயில்பட்டி கே. மடத்துப்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த மாரிசாமி மனைவி அய்யம்மாள் (35). இவா் த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் பகுதியில் இன்று மின் தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உப மின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்செந்தூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா... மேலும் பார்க்க