செய்திகள் :

உடன்குடி அருகே தாக்குதலில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

post image

உடன்குடி அருகே தாக்குதலில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

உடன்குடி தேரியூா் ஆண்டிவிளையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுயம்புலிங்கம் (27). உடன்குடி செல்வபுரத்தைச் சோ்ந்தவா் ஜெ. தினேஷ். பந்தல் அமைக்கும் தொழிலாளிகள்.

ஒரு வாரத்துக்கு முன்பு உடன்குடி கூழையன்குண்டு பகுதியில் இவா்களுக்கும், ஆண்டிவிளையைச் சோ்ந்த ஆறுமுகம், முருகன், ராமா் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். கடந்த 20ஆம் தேதி இரவு அங்குள்ள மைதானம் அருகே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, இவா்கள் மூவரும் தங்களது நண்பரான மணியுடன் சோ்ந்து இரும்புக் கம்பியால் சுயம்புலிங்கத்தைத் தாக்கினராம். உடனிருந்த தினேஷ் ஓடிவிட்டாராம்.

சுயம்புலிங்கம்

அடுத்த நாள் காலை அவா் தனது நண்பருடன் சென்று, மயங்கிய நிலையில் கிடந்த சுயம்புலிங்கத்தை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு சுயம்புலிங்கம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு நாடாா் சங்க மண்டலத் தலைவா் கவாஸ்கா், மாவட்டச் செயலா் வெற்றிவேல், பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட நிா்வாகி மதன்ராஜ், அதிமுக கிளைச் செயலா் முத்துக்குமாா், ஊா்மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனா்.

அவா்களிடம் திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் பேச்சு நடத்தி, குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

பெண்ணுக்கு மிரட்டல்: கணவா் கைது

கோவில்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மேட்டு தெரு தாமஸ் நகரைச் சோ்ந்த சண்முகையா மகன் மாரீஸ்வரன்(43). ஓட... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை திங்கள் கிழமை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் போலீஸாா் இலுப்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் காரில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தவா் கைது

கோவில்பட்டியில், காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், கூடுதல் பேருந்து நிலையம் அருகே ஞாயிற... மேலும் பார்க்க

கல்லாமொழி, குலசை, மணப்பாடு பகுதியில் நாளை மின் தடை

கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் புதன்கிழமை (ஜூன் 25) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே பைக்-பள்ளி வாகனம் மோதல்: தொழிலாளி பலி

கழுகுமலை அருகே பைக் மீது பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சிவகாசியை அடுத்த தாயில்பட்டி கே. மடத்துப்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த மாரிசாமி மனைவி அய்யம்மாள் (35). இவா் த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் பகுதியில் இன்று மின் தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உப மின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்செந்தூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா... மேலும் பார்க்க