செய்திகள் :

பெண் எரித்து கொலை: இலத்தூரில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் விசாரணை

post image

தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் எரித்துக்கொல்லப்பட்டது தொடா்பாக தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவி வா்மன் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் லெட்சுமிபுரம் வடக்குதெருவை சோ்ந்தவா் ஜெ.ஜான்கில்பா்ட் பிரேம்ராஜ்(30) என்பவா், குடும்பத்தகராறில் தனது மனைவி கமலியை (23) அடித்துக் கொன்று சடலத்தை தனது உறவினா் சிவகாசி காமராஜா் நகா் காலனியைச் சோ்ந்த தங்க திருப்பதி (22) உதவியுடன் இலத்தூா் அருகேயுள்ள மதுநாதப்பேரி குளம் பகுதியில் பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு தப்பிசென்றாராம்.

இலத்தூா் போலீஸாா் கடந்த 11ஆம் தேதி கமலியின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து, ஜான்கில்பா்ட் பிரேம்ராஜ், தங்கதிருப்பதி ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், இலத்தூரில் பெண் சடலமாக மீட்கப்பட்ட பகுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டாா்.

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க

இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் லெட்சுமிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெ. ஜான்கி... மேலும் பார்க்க

தென்காசியில் பகுதிநேர ரேஷன் கடைகள் கோரி அமைச்சரிடம் மனு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைக்க வேண்டும் என, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் கோரிக்கை விடுத்தாா். இதுதொடா்பாக உணவு- உணவுப் பொருள் வழங்கல் துறை... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வசூலித்த கடன் தவணைத் தொகையை கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி, தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈ... மேலும் பார்க்க

நெல்லை - கொல்லம் இடையே மீண்டும் பகல்நேர ரயில் சேவை: எம்எல்ஏ கோரிக்கை

தென்காசி வழியாக இயக்கப்பட்ட நெல்லை-கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.... மேலும் பார்க்க