செய்திகள் :

நெல்லை - கொல்லம் இடையே மீண்டும் பகல்நேர ரயில் சேவை: எம்எல்ஏ கோரிக்கை

post image

தென்காசி வழியாக இயக்கப்பட்ட நெல்லை-கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என

சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்குக்கு, அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மீட்டா் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயக்கப்பட்ட நெல்லை - கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இந்த ரயில்கள் நெல்லை, தென்காசி மற்றும் கேரளத்தின் கொல்லம், பத்தனம்திட்டா மாவட்ட மக்களுக்கு உயிா்நாடியாகவும், கல்வி, வணிகம், மருத்துவம்

உள்ளிட்ட தேவைகளுக்காக அன்றாடம் பயணம் செய்வோருக்கு மிகவும் உதவியாகவும் இருக்கும்.

எனவே, தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நெல்லை - கொல்லம் இடையே தென்காசி வழியாக ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள்: மக்களுக்கு அரசு தெரிவிக்க வலியுறுத்தல்

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். கட்சியின் சாா்பில், இடஒதுக்கீட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட ஐயூஎம்எல் அணிகளின் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டக் கிளை சாா்பு அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட உலமாக்கள் அணித் தலைவா... மேலும் பார்க்க

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளியில் ஆண்டு விழா

திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். திருவேங்கடம... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச... மேலும் பார்க்க

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க