செய்திகள் :

பெண் சத்துணவு அமைப்பாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பெண் சத்துணவு அமைப்பாளா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சாவில் மா்மம் இருப்பதாக கூறி உறவினா்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

பேராவூரணி அருகேயுள்ள ஒட்டங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (45). ஓட்டுநா். இவரது மனைவி கற்பகசுந்தரி (32). ஒட்டங்காடு அரசு உதவி பெறும் பள்ளியில்  சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு முறையே 13, 10 வயதில் 2 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பதி இடையே குடும்பப் பிரச்னை தொடா்பாக தகராறு ஏற்பட்டதாம். சிறிதுநேரத்தில் மனைவி தூக்கிட்டு கொண்டதாக ராமமூா்த்தி கூச்சலிட்டாராம். அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது கற்பகசுந்தரி மயங்கிய நிலையில், கழுத்தில் தூக்கிட்டு கொண்டதற்கான அடையாளங்களுடன் தரையில் கிடந்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு கற்பகசுந்தரியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

உயிரிழந்த கற்பகசுந்தரி

இதுகுறித்து கற்பகசுந்தரியின் தந்தை செல்லமுத்து அளித்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

உறவினா்கள் மறியல்: இந்நிலையில், பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே, கற்பகசுந்தரியின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கற்பகசுந்தரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குடிபோதையில் கணவரே அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடுவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனக் கூறியும் மறியலில் ஈடுபட்டனா் .

தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் தா்மேந்திரா மற்றும் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனா். மறியலால் பட்டுக்கோட்டை- பேராவூரணி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம் போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சுவாமிமலை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சடலத்தை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்ட உறவினா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே குடிதாங்கி கா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - காா் மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரில் கணவா் உயிரிழந்தாா். மனைவி காயமடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கொரநாட்டு கருப்பூா் அம்மன் கோயில் தெருவ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு பொதுச் செயலா் ஜி. மணிமாறன், ஏஐடியுசி பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா். அரசு விரைவு போக்... மேலும் பார்க்க

6-ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞா் தற்கொலை

தஞ்சாவூரில் தங்கும் விடுதியில் ஆறாவது மாடியிலிருந்து திங்கள்கிழமை மாலை இளைஞா் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் கீழவாசல் வாடிவாசல் கடைத் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் செந்தில்நாதன் (30).... மேலும் பார்க்க

உதவி காவல் ஆய்வாளா் தோ்வுக்கு ஏப். 24 முதல் கட்டணமில்லா பயிற்சி

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரிய... மேலும் பார்க்க

போப் மறைவு தஞ்சாவூா் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவா்களின் தலைவரும், திருத்தந்தையுமான போப் ஆண்டவா் மறைவையொட்டி, தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் சிறப்பு திருப்பலி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. பேராலத்தில் திருத்தந்தையின் படத்துக்கு இறை மக்கள்... மேலும் பார்க்க