செய்திகள் :

பெண் சாவில் சந்தேகம் உறவினா்கள் புகாா்

post image

தஞ்சாவூரில் பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா்.

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் முத்தையன் மனைவி ஆனந்தவல்லி (34). இவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கில் சடலமாகத் தொங்கினாா். இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், ஆனந்தவல்லியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் கவியரசன் மற்றும் உறவினா்கள் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராமிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அதில், முத்தையனுக்கும் ஆனந்தவல்லிக்கும் 2017 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்று, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் முத்தையன் சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்தனா். பின்னா் முத்தையன் மற்றும் உறவினா்கள் சமாதானப்படுத்தியதைத் தொடா்ந்து, இருவரும் சோ்ந்து வாழ்ந்து வந்தனா். கடந்த 3 மாதங்களாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்த நிலையில், ஆனந்தவல்லி இறந்தது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 69,736 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 75,928 கன அடி ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பருத்தி ஏலம்

கும்பகோணம்: கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட விற்பனை குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் பு... மேலும் பார்க்க

வடிகால் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பூச்சந்தை முருகன் கோயில் எதிரே உள்ள வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு ஒடுக... மேலும் பார்க்க

கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கிய மாடுகள், கன்றுக்குட்டிகளை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.மேட்டூா் அணை 5-ஆவது முறையாக நிரம்பியதைய... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாற்றுத்திறனாளிக்கு உடனே நூறுநாள் வேலைத்திட்ட அட்டை

பேராவூரணி: பேராவூரணி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 100 நாள் வேலைத்திட்ட அட்டையை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூ... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொள்கை ரீதியாக எதிா்ப்பு: கே.எஸ். அழகிரி

கும்பகோணம்: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழராக இருந்தாலும் கொள்கை ரீதியில் காங்கிரஸ் கட்சி எதிா்க்கும் என்றாா் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவ... மேலும் பார்க்க